இந்தியாவின் நிதியியல் தலைநகரமான மும்பையில் பல பில்லியனர்கள் இருக்கும் வேளையில் மும்பையின் பணக்கார பெண் யார் தெரியுமா..?இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி முதல் தனது சொத்து மதிப்பு ஜீரோ என வெளிப்படையாக கூறிய அனில் அம்பானியும் மும்பையில் தான் வசிக்கிறார். ஆனால் மும்பையின் பணக்காரர் பெண் என்ற சிறப்பு அடையாளம் இவருக்கு மட்டும் தான் உண்டு.
இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண் மற்றும் மும்பையின் பெரும் பணக்காரர் பெயர் ரோஹிகா சைரஸ் மிஸ்திரி. இவர் மறைந்த சைரஸ் மிஸ்திரியின் மனைவியான ரோஹிகா மிஸ்திரி ஆவார். சைரஸ் மிஸ்திரி, இந்தியாவின் மிகவும் பழமையான கட்டுமான நிறுவனமான SP GROUP-ன் தலைவரான பல்லோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன் ஆவார்.

சைரஸ் மிஸ்திரி SP GROUP வளர்ச்சிக்கு முக்கிய பங்கு விகித்தது மட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இவர் தலைமையிலான டாடா குரூப் பல சர்ச்சைகளை எதிர்கொண்ட போது ரத்தன் டாடா இவர் மீது வழக்கு தொடுத்து பதவியில் இருந்து நீக்கினார். இந்த நிலையில் சைர்ஸ் மிஸ்திரி ஜூன் 2022 இல் கார் விபத்தில் இறந்தார்.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் பில்லியனர் என்ற அந்தஸ்து பெற்ற மூன்று பெண்களில் ரோஹிகா மிஸ்ட்ரியும் ஒருவர் ஆவார். அவரது நிகர மதிப்பு 7.4 பில்லியன் டாலர்களாகும், இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 60,000 கோடி ரூபாய். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பணக்காரப் பெண்மணியாகவும் உயர்ந்தார். முதல் இடத்தில் சாவித்ரி ஜிண்டால் 17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார்.
ரோஹிகா மிஸ்திரி, தனது கணவர் சைரஸ் மிஸ்திரி மறைவிற்கு பின்பு அவருடைய சொத்துக்களை பெற்ற பிறகு கோடீஸ்வரரானார். சைரஸ் மிஸ்திரி சொத்துக்களில் பெரும் பகுதி டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தான். SP GROUP சுமார் 18.4% டாடா சன்ஸ் பங்குகளை வைத்துள்ளது.
இந்த பங்கு ஆதிக்கத்தை வைத்து தான் அக்டோபர் 2016 வரை நான்கு ஆண்டுகள் டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருந்தார். சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்து சில மாதங்களிலேயே அவருடைய தந்தை இறந்தது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
ரோஹிகா மிஸ்திரி - சைரஸ் மிஸ்திரி 1992 இல் திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்குல ஜஹான் மிஸ்திரி மற்றும் ஃபிரோஸ் மிஸ்திரி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். தற்போது இவரும் எஸ்பி குரூப் நிர்வாகத்தில் இணைந்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications