தோட்டக்கலையில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. மக்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தொழில்களுக்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காளான் வளர்த்தல் மற்றும் பதப்படுத்தல் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்ட முடிகிறது.
வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே முதலீடு செய்து காளான் வளர்த்தல் மற்றும் பதப்படுத்தல் தொழிலில் அபரிமிதமான லாபத்தை ஈட்டலாம் என்று தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். அண்மைக்காலமாக காளான் வளர்ப்புத் தொழிலில் வேகமாகப் பரவி வருகிறது. அதன் சுவை, ஊட்டச்சத்து மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

சைவப் பிரியர்களின் அசைவ ஆசைக்கு காளான் நிச்சயம் தீனி போடும் அளவுக்கு அதன் சுவையும் மணமும் அமைந்துள்ளது. உடல் எடை குறைப்பு பற்றி கவலைப்படுபவர்கள் காளான்களை விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் அதில் குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்பு அடங்கியுள்ளது. அத்துடன் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் காளான் கொண்டுள்ளது.
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய திட்டக் குறிப்பின்படி காளான் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தல் தொழிலுக்கு கீழ்கண்டபடி முதலீடு தேவைப்படுகிறது.
நிலம்- வாடகை அல்லது சொந்தம்
கட்டடம் மற்றும் கட்டுமான செலவு- ரூ5 லட்சம்
ஆலை மற்றும் உபகரணங்கள்- ரூ.8 லட்சம்
பர்னிச்சர்கள்- ரூ.69,000
முன்தொடக்க செலவுகள்- ரூ.50,000
மொத்தம்- ரூ.20 லட்சம்
முதலீட்டுக்கான வழிகள்
சுய முதலீடு 10 சதவீதமான ரூ.2 லட்சம்
டெர்ம் லோன்- ரூ.12.77 லட்சம்
உற்பத்திக்கான மூலதன பைனான்ஸ்-ரூ.5.22 லட்சம்
மொத்தம்- ரூ.20 லட்சம்
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய திட்ட குறிப்பின்படி, நீங்கள் முதல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டில் பெறும் விற்பனை முறையே தலா ரூ.76.95 லட்சம், ரூ.93.83 லட்சம், ரூ.107 கோடி, ரூ.120 கோடி மற்றும் ரூ.134 கோடி ஆகும்.
இதில் நிகர லாபம் முதலாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு நான்காமாண்டு மற்றும் ஐந்தாமாண்டில் முறையே ரூ.8.90 லட்சம், ரூ.11.32 லட்சம், ரூ.14.51 லட்சம், ரூ.17.55 லட்சம் மற்றும் ரூ.20.44 லட்சம் பெறலாம் என ஆணையக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த வருவாய், லாபம் அனைத்தும் உற்பத்தி அளவு, முதலீடு, மார்ஜின் விகிதம் ஆகியவற்றில் மாறுப்படும். எனவே அனைவருக்கும் இத்தகைய லாபம் கிடைக்கும் என்பது இல்லை, அதேவேளையில் காளான் வளர்ப்பில் பெரிய அளவில் வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் எந்தப் பகுதியிலும் காளான்களை வளர்ப்பதற்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகமான CFTRI வசதி செய்து தந்துள்ளது. இதற்கான தொழில்நுட்பம் CFTRI-யிடம் உள்ளது. காளான் தொழிற்கூடங்களில் உணவுக் கலப்படத் தடை சட்டத்தின் பிரிவுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
முதலில் காளான் வளர்ப்புத் தொழிலுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் லைசென்ஸைப் பெற வேண்டும். காளான் வளர்ப்புத் தொழில் உணவு பாதுகாப்பு சட்டம் 2006இன் கீழ் வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications