நடப்பு நிதியாண்டின் கடைசி வர்த்தக நாள் மார்ச் 31 நெருங்கிய நிலையில், இந்த தேதிக்குள் மியூச்சுவல் ஃபண்ட் (MF) முதலீட்டாளர்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை "உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்" (KYC) நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களை பாதிக்கும் ஒரு முக்கிய மாற்றம் இது என்றாலும் கட்டாயம் மீண்டும் ஒரு முறை உங்கள் KYC சரி பார்ப்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

கேம்ஸ் (CAMS) மற்றும் கேஎஃபின்டெக் (KFintech) ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் பதிவேட்டாளர் மற்றும் பரிமாற்ற முகவர்கள் (RTAs) தற்போது மின்னஞ்சல் மூலம் தீவிரமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
KYC ஐ மீண்டும் செய்வது ஏன் முக்கியம்?: அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களின் அடிப்படையில் KYC செய்யப்படாத முதலீட்டாளர்கள், மார்ச் 31க்கு முன்பு மீண்டும் தங்கள் KYC ஐ முடிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், ஏப்ரல் 1 முதல் SIP கள், SWP கள் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் போகும்.
KYC க்கான ஆவணங்கள்: வங்கி அறிக்கைகள் மற்றும் யூட்டிலிட்டி பில்கள் போன்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட KYC, மார்ச் 31க்குப் பிறகு செல்லுபடியாகாது. முதலீட்டாளர்கள் தங்கள் KYC ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒழுங்குமுறை விதிமுறைகள்: KYC ஐ மீண்டும் செய்ய வேண்டிய தேவை, பத்திர பத்திர சந்தைக்கான KYC விதிமுறைகள் மற்றும் பண மோசடி தடுப்பு (பராமரிப்பு பதிவுகள்) விதிகள், 2005 பற்றிய செபி முதன்மை சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட இணக்க தேவைகளில் இருந்து உருவாகிறது.
KYC செயல்முறையை மீண்டும் செய்வது எப்படி: KYC ஐ மீண்டும் செய்ய, முதலீட்டாளர்கள் தொடர்புடைய ஆவணங்களுடன் ஒரு KYC படிவத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அல்லது RTAl களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட KYC தகவல் பின்னர் KYC பதிவு முகவர்களுக்கு (KRAs) தெரிவிக்கப்படும்.
இதை ஆன்லைனில் செய்ய முடியுமா?: KYC ஐ மீண்டும் செய்வதை ஆன்லைனில் முடிக்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது. முதலீட்டாளர்கள் நேரடியாக சென்றே இந்த செயல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
செயல்படுத்தும் நேரம்: KYC பதிவு செயல் முறை முழுமையாக முடிக்க 2 நாள் முதல் 21 நாட்கள் வரையில் ஆகும். இந்த கால அளவு பல்வேறு காரணங்கள் அடிப்படையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications