உலகளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பல்வேறு டெக் ஜாம்பவான்கள் தொடங்கி, சிறுசிறு நிறுவனங்கள் வரையில் பணி நீக்க நடவடிகையினை கையில் எடுத்துள்ளது. இது செலவு குறைப்பின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டாலும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களது வேதனைகளை சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.
சில தினங்களுக்கு கூகுள் நிறுவனமும் தங்களது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. அதில் இருந்தே ஊழியர்கள் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்படும் செய்திகளும் வெளியாகி வருகின்றன.
நள்ளிரவில் பணி நீக்கம்
இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 16 வருடங்களாக பணி புரிந்தவர்கள் கூட நள்ளிரவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரசவ விடுமுறைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள ஒரு பெண், கூகுள் நிறுவனம் தன்னை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண் பணி நீக்கம்
பிரசவ கால விடுமுறையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு, நிறுவனம் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்பது போல பணி நீக்கம் செய்துள்ளது. பிரசவத்தினை எதிர் நோக்கியுள்ள தனக்கு எப்படி, புதிய வேலை உடனடியாக கிடைக்கும் என கவலையில் உள்ள அந்த பெண், தனது வேதனையை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதயமே கனத்து விட்டது
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த கேதரின் வாங் தான் அந்த பெண். அவர் புரோகிராம் மேலாளராக பணி புரிந்து வந்தார். 8 மாத கர்ப்பிணியான உள்ளவராவர். தனது குழந்தையின் வருகைக்காக சந்தோஷத்தில் இருந்த நிலையில், நிறுவனத்தின் பணி நீக்க மெயிலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்ததாகவும், எனது இதயம் கனத்துவிட்டது என்றும் தனது லிங்க்ட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜீரணிக்கவே முடியவில்லை
மேலும் எனது செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், எனக்கு இப்படி ஒரு செய்தி கிடைத்ததை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு புரோகிராம் மேலாளராக திட்டமிடலே என் உள்ளுணர்வாக இருந்தது. ஆனால் நான் கையாண்டதிலேயே இது தான் மிகவும் கடினமான வேலையாக இருந்தது. அதிலும் பணி நீக்கம் செய்யப்பட்ட காலம் மிக கடினமானதொரு காலம்.
கைகள் நடுங்குகின்றன
34 வார கர்பிணியாக உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வேலை கிடைக்குமா? அது உடனடியாக என்பது நடக்காத ஒரு காரியம். நான் மகப்பேறு கால விடுமுறையில் செல்லவுள்ள நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு எனக்கு மிக வேதனை அளிக்கிறது.
நாள் முழுக்க எனக்கு கால்களும், செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. மக்கள் எனது குழந்தையின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். நான் குழந்தையின் நலன் கருதி எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால் இன்னும் கூட என் கைகள் நடுங்குகின்றன.
உணர்வு பூர்வமான பதிவு
என் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இவ்வுலகினை எட்டி பார்க்க வேண்டும். ஆக நான் உறுதியாக இருக்க முயற்சி செய்கிறேன். நான் அதனை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. கூகுளில் நான் இருந்த காலத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கும், வளர்ச்சிக்கும் நன்றி. நான் நம்புகிறேன் இதுவும் கடந்துபோகும் என உணர்வுபூர்வமான ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications