சமீபகாலமாக மோசடி தொடர்பான செய்திகள் அதிக அளவில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான மிந்த்ராவையும் விட்டு வைக்கவில்லை. மிந்த்ரா நிறுவனம் சமீபத்தில் பெங்களூரு முழுவதும் மோசடியான ஆர்டர்களைப் பெற்று ரூ.1.1 கோடியை இழந்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின் படி மோசடிக்காரர்கள் மிந்த்ரா தளத்தினை பயன்படுத்தி ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்கு பொய்யாக ரீஃபண்ட் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
மிந்த்ரா தளத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் 5,529 ஆர்டர்கள் பெங்களூருவில் இருந்து மட்டும் பெறப்பட்டுள்ளன. மிந்த்ரா நிறுவனத்தின் புகார்படி ஏமாற்றுகாரர்கள் விலை உயர்ந்த பிராண்டட் காலணிகள், உடைகள், அணிகலன்கள் என மொத்தமாக ஆர்டர் செய்து பேமெண்ட் செலுத்தி பொருட்களை பெற்றுள்ளனர்.

அதன் பிறகு சில பொருட்கள் வரவில்லை என்று கூறியும், ஆர்டர் செய்தது ஒன்று தங்களுக்கு கிடைத்த ப்ராடக்ட் ஒன்று என்று கூறியும் ப்ராடக்ட்டை ரிட்டன் செய்துள்ளனர். இதுபோன்ற கோரிக்கைகள் வரும் பட்சத்தில் மந்த்ரா நிறுவனம் ரீஃபண்ட் தொடர்பான செயல் முறையை தொடங்கும். இப்படி இந்த தளத்தில் கோரிக்கை எழுப்பி ஏமாற்றி உள்ளனர். நடந்த மோசடி குறித்து விளக்கம் அளித்த ஒரு காவல்துறை அதிகாரி, "ஒரு நபர் 10 ஜோடி பிராண்டட் ஷூக்களை ஆர்டர் செய்கிறார் என்றால் பார்சலை பெற்ற பிறகு அதில் வெறும் 5 ஜோடி ஷூ மட்டுமே இருப்பதாகக் கூறி ஏமாற்றுகின்றனர். இந்த வகையில் தான் இந்த மோசடி நடைபெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதே போல துணிகளையும் ஆர்டர் செய்து சில மோசடிக்காரர்கள் ரீபண்ட் பெற்று ஏமாற்றியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இது குறித்து பேசிய மிந்த்ரா நிறுவனத்தின் டிசைன்ஸ் என்போர்ஸ்மென்ட் ஆபிசரான சர்தார்.. இது போன்ற மோசடிகள் ஆடிட்டிங்-கின் போது வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவித்தார். நாடு முழுவதும் மோசடி ஆர்டர்களால் மிந்த்ரா நிறுவனம் எதிர்கொள்ளும் இழப்புக்கு வழிவகை செய்யும் வகையில் புகார் அளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் இந்த மோசடியில் ராஜஸ்தானைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்த விசாரணையை நடத்தி வருவதாகவும் பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். முன்பு அப்பாவி மக்களை ஏமாற்றி வந்த கும்பல் தற்போது இ-காமர்ஸ் தளங்களையும் விட்டு வைக்காமல் தங்களுடைய விளையாட்டை தொடங்கியுள்ளனர். இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications