தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த முறை சட்டமன்ற தேர்தல் நான்கு முனை போட்டி கொண்டதாக இருப்பதால் பலத்த எதிர்பார்ப்புகளை கொண்டதாக மாறி இருக்கிறது. ஒருபுறம் திமுக கூட்டணி , மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி, மற்றொருபுறம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என இந்த தேர்தல் அதிக சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது.
முதன்முறையாக இந்த தேர்தலில் விஜய் நேரடியாக களம் காண்கிறார் என்பதால் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு எகிறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்கள் யார், அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார், தமிழகத்தை தலையெழுத்தை தீர்மானிக்க போகும் தொகுதிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இந்த முறையும் கொளத்தூர் தொகுதியிலேயே களம் காண்கிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக கொளத்தூர் தொகுதி இருக்கிறது. அடுத்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியிலே களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

அந்த வகையில் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அனைத்து முதலமைச்சர் வேட்பாளர்களும் ஒரு தொகுதியில் போட்டியிடும் நிலையில் விஜய் இரண்டு தொகுதிகளை தேர்வு செய்துள்ளார். இரண்டிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். இந்த தேர்தலில் பாரம்பரியமாக இருக்கும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பார்களா, இவற்றுக்கு மாற்று என கூறும் நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளை ஆதரிப்பார்களா என்பது மே 4ஆம் தேதி தெரிந்துவிடும்.
எனவே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேனி, எடப்பாடி, காரைக்குடி, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக இருக்கின்றன. இந்த 6 தொகுதி மக்கள் என்ன முடிவினை எடுக்க போகிறார்கள் என்பது தான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது.
இதற்கிடையே சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளைய தினம் தொடங்குகிறது. மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய முடியும். ஆனால் இதற்கிடையே நான்கு நாட்கள் மட்டுமே அலுவல் நாட்கள். இடையிடையே விடுமுறைகள் வருவதால் வேட்பாளர்கள் மார்ச் 30ஆம் தேதியான திங்கட்கிழமை , ஏப்ரல் 2 ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்களை சமர்ப்பித்தாக வேண்டும்.
இந்த முறை ஆன்லைன் மூலமாகவும் வேப்பமனு தாக்கல் செய்வதற்கான வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6ஆம் தேதி சுப முகூர்த்த தினமாக இருப்பதால் அன்றைய தினம் ஏராளமானவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை வரும் 7ஆம் தேதி நடக்கும் வேட்பு மனுக்களை திரும்ப பெற 9ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
More From GoodReturns

திமுக, அதிமுக, தவெக - யாருக்கு வெற்றி? லட்ச கணக்கில் Betting நடக்குது.. ஷாக் தகவல்..!!

தங்கம் விலை குறைஞ்சிருக்கும் நேரத்துல தமிழ்நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு சிக்கலா!!

ADMK கலக்கல் தேர்தல் வாக்குறுதி: இலவசமாக Fridge, ரூ.10000 நிதியுதவி.. வேலையில்லாதோருக்கு ரூ.2000.. மொத்தம் 297

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications

