இந்திய பொருளாதாரத்தில் சாதாரணமாக வேலைவாய்ப்பு தொடங்கி, பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி வரை ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.
மத்திய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது.
இருப்பினும் பெரிய மாற்றங்கள் ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை. அதை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுவோம்.
அமைப்பு சாராத வேலைகள்
இதை ஆங்கிலத்தில் Informal Jobs என்று சொல்வார்கள். முழுமையாக அரசின் கண்காணிப்பில் வராமல் இருக்கும் சிறிய சிறிய வேலைவாய்ப்புகளை எல்லாம் இந்த அமைப்பு சாராத நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு வரி, அரசு நடைமுறைகள் எல்லாம் அதிகம் தெரியாது. இந்தியாவில் 77 சதவிகித வேலை வாய்ப்புகளை மேலே சொன்ன அமைப்பு சாராத நிறுவனங்கள் தான் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன என்கிறார் சந்திரசேகரன்.
அமைப்பு சாராத வேலைகள்
இதை ஆங்கிலத்தில் Informal Jobs என்று சொல்வார்கள். முழுமையாக அரசின் கண்காணிப்பில் வராமல் இருக்கும் சிறிய சிறிய வேலைவாய்ப்புகளை எல்லாம் இந்த அமைப்பு சாராத நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு வரி, அரசு நடைமுறைகள் எல்லாம் அதிகம் தெரியாது. இந்தியாவில் 77 சதவிகித வேலை வாய்ப்புகளை மேலே சொன்ன அமைப்பு சாராத நிறுவனங்கள் தான் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன என்கிறார் சந்திரசேகரன்.
டெக்னாலஜி மாற்றம்
இந்தியாவின் பல துறைகளிலும் புதிய டெக்னாலஜியையும், புதிய பயிற்சி முறையையும் கொண்டு வந்தால், வேலை வாய்ப்புகளை முறைப்படுத்தலாம். அதோடு பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தையும் 15 - 20 சதவிகிதம் வரை அதிகமாக கொடுக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார் டாடா குழும தலைவர் சந்திரசேகரன்.
நிறைய வேலைகள்
எப்போது புதிய டெக்னாலஜி வருகிறதோ அப்போது சேவை மற்றும் நுகர்வு அதிகரிக்கும். அப்போது ஒரு சந்தையும் உருவாகும். இது ஒரே நாள் இரவில் நடக்காது. ஆனால் டெக்னாலஜிக்கு, நிறைய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறமை இருக்கிறது எனச் சொல்லி ஊக்கம் அளித்து இருக்கிறார். டாடா குழும தலைவர் சொல்வது போல வேலை வாய்ப்புகள் அதிகரித்தால் ஓகே தான்.