மும்பை: இந்தியாவில் பல பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் வாரிசு கைகளுக்கு மாறி வருவது போல், பல சாம்ராஜ்ஜியங்களுடைய குடும்பத்திற்கு மத்தியில் பிரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பேமஸ் ஆன கோத்ரேஜ் குழுமம் தற்போது இரண்டாக உடைந்துள்ளது.
127 ஆண்டுகளாக சோப்பு, வீட்டு உபகரணங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல்வேறு துறைகளில் இயங்கி வரும் கோத்ரேஜ் குழுமம் 2ஆக பிரிவதாக அறிவித்துள்ளது. இதில் கோத்ரேஜ் குடும்பத்தின் முக்கிய முகங்களாக இருக்கும் ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளனர்.

இதில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் தலைவரான் நாதிர் கோத்ரேஜ் மும்பையில் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று அபார்ட்மெண்ட்களை வாங்கி இருக்கிறார். ஜேஎஸ்டபிள்யூ ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து அவர் இந்த குடியிருப்புகளை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
மும்பையில் பணக்கார பகுதியாக காணப்படும் மலபார் ஹில்ஸின் ருபாரஸ் ஹவுஸ் பகுதியில் 13,831 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்ட்டை இவர் வாங்கியுள்ளார். இங்கே ஒரு சதுர அடியின் மதிப்பு 1.3 இலட்சம் ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மூன்று அபார்ட்மெண்டிலும் கார்பெட் ஏரியா என்பது 4,610 சதுர அடி ஆகும். இவை 6,7,8 ஆகிய தளங்களில் அமைந்துள்ளன. ஜூன் 12ஆம் தேதி இது தொடர்பான விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அபார்ட்மெண்ட்க்கும் கோத்ரேஜ் 3.5 கோடி ரூபாயை பதிவு கட்டணமாக செலுத்தி இருக்கிறார். மலபார் ஹில்ஸ் என்பது இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் வசிக்கக்கூடிய ஒரு இடமாகும். மும்பையில் உள்ள மிகவும் காஸ்ட்லியான ஒரு பகுதி என்றும் சொல்லலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகள் மிகப்பெரிய அளவில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. சாவல் இந்தியா நிறுவனத்தின் தகவலின் அடிப்படையில் மலபார் ஹில்ஸ், பல்கேஸ்வர் மற்றும் நீபியன் சாலை ஆகிய தெற்கு மும்பை பகுதிகளில் பல்வேறு மறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கடந்த மார்ச் மாதம் கூட புகழ்பெற்ற இந்திய முதலீட்டாளரான ரேகா ஜூன்ஜூன்வாலா மலபார் ஹில்ஸ் பகுதியில் ஒரு கட்டிடத்தின் அனைத்து குடியிருப்புகளையும் விலை கொடுத்து வாங்கினார். பிராமல் கேப்பிட்டல் இந்தியாவின் முன்னணி முதலீட்டு மற்றும் வர்த்தக நிறுவனம். இதன் இயக்குனரான ஆசா முகுல் அகர்வால் 253 கோடி ரூபாய் கொடுத்து 3 அபார்ட்மெண்டுகளை வாங்கினார்.
73 வயதாகும் நாதிர் கோத்ரேஜ், இந்தியாவின் புகழ்பெற்ற கோத்ரேஜ் குழுமத்தை சேர்ந்தவர். கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோத்ரேஜ் அக்ரோவேட் நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் ஐஐடி மும்பை, எம்ஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றில் கல்வி பயின்றவர். இவரது சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications