இன்போசிஸ் நாராயண மூர்த்தி - மோகன்தாஸ் பாய் உடனான தி ரெக்கார்ட் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு தற்போது சர்வதேச அளவில் கிடைத்துள்ள மரியாதையை பயன்படுத்த அடுத்த 20 அல்லது 50 வருடங்களுக்கு இந்திய இளைஞர்கள் தினமும் 12 மணிநேரம் அதாவது வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்றி இந்தியாவை உலகின் 2வது அல்லது 3வது சக்திவாய்ந்த நாடாக உயர்த்த வேண்டும் என அறிவிறுத்தினார்.
இவருடைய கருத்துக்கு பல கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் சுதா மூர்த்தி, மோகன்தாஸ் பாய், டெக் மஹிந்திரா சிஇஓ சிபி குருனானி உட்பட பலர் ஆதரவு தெரிவித்தாலும் மருத்துவர்கள், சாமானிய ஊழியர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் பல வருடங்களாக பிரஷ்ஷர்களின் சம்பளம் உயர்த்தப்படாமல் அதே 3 முதல் 3.5 லட்சம் ரூபாய் அளவீலேயே உள்ளது. ஒவ்வொரு வருடமும் இன்போசிஸ் சிஇஓ மற்றும் ஊழியர்கள் மத்தியிலான மீடியன் சம்பள அளவு அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்படாத பட்சத்தில் இளைஞர்களை மட்டும் 70 மணிநேரம் பணியாற்ற கூறுவது மிகவும் தவறு என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் 100க்கு 99 நிறுவனங்கள் வாரத்தில் 5 நாள் வேலை உடன் வாரத்திற்கு 40 மணிநேரம் பணியாற்றினாலும் பணிநேரத்திற்கும் கூடுதலாகவே பணியாற்றி வருகின்றனர். இதேபோல் பணிநேரம் முடிந்த பின்பும் வாட்ஸ்அப், ஈமெயில், போன்கால் வாயிலாக பணி குறித்த பேச்சுக்கள் நடந்து தான் வருகிறது. இப்படியிருக்கையில் தினமும் 12 மணிநேர பணி குறித்த பேச்சு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஊழியர்கள் 48 மணிநேரத்திற்கு சம்பளம் பெற்று வரும் வேளையில் 70 மணிநேரம் பணியாற்றினால் சம்பளத்தை நிறுவனங்கள் உயர்த்த வேண்டுமா அல்லது வேண்டாமா என பசந்த் மேகேஷ்வரி வெல்த் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பசந்த் மேகேஷ்வரி டிவிட்டரில் கேள்வி கேட்டு உள்ளார்.
நாராயண மூர்த்தி பேசும் போது இளைஞர்கள் என பொதுவாக தான் பேசியுள்ளார், இதில் இன்போசிஸ் போன்ற நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்களையும் குறிக்கும். மேலும் மோகன்தாஸ் பாய் கூறுவது போல 30 வயதுக்கு கீழ் என்று அவர் பேசவில்லை. பர்சனல் டெவலப்மென்ட்-க்காக அதிக நேரத்தை செலவிடவும் நாராணய மூர்த்தி குறிப்பிடவில்லை.
இதை தொடர்ந்து அர்ஜூன் என்பவர் இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி-க்கு நன்றி, ஆனால் வாரத்தில் 70 மணிநேரம் அதுவும் 3.75 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பெங்களூரில் வாழ்வது எப்படி..? உங்க வாழ்க்கையை நிம்மதியாக வாழுங்க சார். இளைஞர்களை வாட்டி வதைக்காதீர்கள் என டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications