ராஜஸ்தான் விவசாயிகளுக்கு 12000 ரூபாய்.. பிரதமர் மோடி அறிவித்த மெகா அறிவிப்பு..!!

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களையும், சமூகத்திற்கு ஏதாவது வாக்குறுதி கொடுத்து மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்ற முக்கிய இழக்குடன் பாஜக கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி முதல் பல முக்கிய தலைவர்கள் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளனர்.

இதில் முக்கியமாக பெண் வாக்காளர்களை கவரும் வகையில் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என அக்கட்சி ஏற்கனவே உறுதியளித்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மாநில பாஜக அரசு, பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு 12000 ரூபாய்.. பிரதமர் மோடி அறிவித்த மெகா அறிவிப்பு..!!

தற்போது ​பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வரும் வேளையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மாநில பாஜக அரசு இத்தொகையை இரட்டிப்பு செய்யும் வகையில் 12000 அளிக்கும் என பிரதமர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, விவசாயிகளை ஏமாற்றியவர்கள் தப்ப மாட்டார்கள் என்று கூறினார். விவசாயிகளிடம் இருந்து MSP விலையில் பயிர்களை கொள்முதல் செய்ய ராஜஸ்தான் பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இது மட்டுமின்றி, பிஜேபி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கும் போனஸ் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல் பிரதமர் மோடி கொடுத்த மற்றொரு வாக்குறுதி, அம்மாநில மக்கள் மத்தியில் பெரிய அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை மிகவும் அதிகம் என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால் எரிபொருள் விலை கட்டாயம் மறுஆய்வு செய்து குறைக்கப்படும் என என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை குறித்து மோடி பேசுகையில் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது, ராஜஸ்தானுடன் ஒப்பிடும்போது அங்கு பெட்ரோல் விலை ரூ.12-13 குறைவாக விற்கப்படுகிறது.

ஆனால் ராஜஸ்தானில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு பெட்ரோலை அதிக விலைக்கு விற்கிறது. நான் உத்தரவாதம் தருகிறேன் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்பு பெட்ரோல், டீசல் விலை மறுஆய்வு செய்யப்பட்டு குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

200 சட்டமன்ற இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது, டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ராஜஸ்தான் மாநில தேர்தலின் வெற்றி 2024 பொது தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் பிஜேபி அரசும், பிரதமர் மோடியும் அனைத்து தரப்பு மக்களையும் கவர அதிகப்படியான வாக்குறுதிகளை அள்ளி வீச துவங்கியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+