ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களையும், சமூகத்திற்கு ஏதாவது வாக்குறுதி கொடுத்து மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்ற முக்கிய இழக்குடன் பாஜக கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி முதல் பல முக்கிய தலைவர்கள் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளனர்.
இதில் முக்கியமாக பெண் வாக்காளர்களை கவரும் வகையில் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என அக்கட்சி ஏற்கனவே உறுதியளித்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மாநில பாஜக அரசு, பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

தற்போது பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வரும் வேளையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மாநில பாஜக அரசு இத்தொகையை இரட்டிப்பு செய்யும் வகையில் 12000 அளிக்கும் என பிரதமர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, விவசாயிகளை ஏமாற்றியவர்கள் தப்ப மாட்டார்கள் என்று கூறினார். விவசாயிகளிடம் இருந்து MSP விலையில் பயிர்களை கொள்முதல் செய்ய ராஜஸ்தான் பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இது மட்டுமின்றி, பிஜேபி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கும் போனஸ் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேபோல் பிரதமர் மோடி கொடுத்த மற்றொரு வாக்குறுதி, அம்மாநில மக்கள் மத்தியில் பெரிய அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை மிகவும் அதிகம் என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால் எரிபொருள் விலை கட்டாயம் மறுஆய்வு செய்து குறைக்கப்படும் என என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை குறித்து மோடி பேசுகையில் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது, ராஜஸ்தானுடன் ஒப்பிடும்போது அங்கு பெட்ரோல் விலை ரூ.12-13 குறைவாக விற்கப்படுகிறது.
ஆனால் ராஜஸ்தானில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு பெட்ரோலை அதிக விலைக்கு விற்கிறது. நான் உத்தரவாதம் தருகிறேன் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்பு பெட்ரோல், டீசல் விலை மறுஆய்வு செய்யப்பட்டு குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
200 சட்டமன்ற இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது, டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ராஜஸ்தான் மாநில தேர்தலின் வெற்றி 2024 பொது தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் பிஜேபி அரசும், பிரதமர் மோடியும் அனைத்து தரப்பு மக்களையும் கவர அதிகப்படியான வாக்குறுதிகளை அள்ளி வீச துவங்கியுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications