இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவின் மின்சார பகிர்மான துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டை இலக்க அளவில் உள்ளது என நரேந்திர மோடி மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மட்டும் அல்லாமல் விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மின்சார பகிர்மானம்
இந்தியாவின் மின்சார பகிர்மானம் அதாவது டிஸ்ட்ரிபியூஷன் துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டை இலக்க அளவில் உள்ளது, ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்திலும் ஒற்றை இலக்கில் தான் உள்ளது என குறிப்பிட்டு மோடி பேசியுள்ளார்.
மின்சாரம் வீண்
அப்படியென்றால் அதிகளவிலான மின்சாரம் வருமானம் ஈட்ட முடியாமல் வீணாகிறது. இதுமட்டும் அல்லாமல் தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
ரூ.1 லட்சம் கோடி நிலுவை
இந்தியாவில் பல மாநிலத்தில் மின்சார வாரியம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலுவை தொகையை வைத்துள்ளது. இந்த தொகை மாநில அரசுகள் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மாநில அரசு
இந்நிலையில் நிலுவை தொகை வைத்துள்ள அனைத்து மாநிலத்தின் மின்சார வாரியமும் விரைவில் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு சரியாக பணம் செலுத்திய போதும் ஏன் மாநில அரசுகளின் நிலுவை தொகை ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது எனவும் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
3 லட்சம் கோடி ரூபாய் உதவி
மேலும் இந்தியாவில் மின்சார பகிர்மானம் மற்றும் மின்சார துறையின் ஆப்ரேஷன்ஸ் திறன் மற்றும் நிதியியல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த 2021-22 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரையிலான நிதிஉதவியை மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications