அம்பானி, அதானி புதிய ராஜாக்கள்.. மோடி அவர்களுக்காக 24 மணிநேரமும் உழைக்கிறார் - ராகுல் காந்தி

பொதுத் தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, 6ஆம் கட்ட தேர்தல் மே 25 ஆம் தேதி முடிந்த நிலையில், ஜூன் 1 ஆம் தேதி கடைசிக் கட்டம் அதாவது 7ஆம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. கடைசி கட்டம் என்பதால் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, குறிப்பாகச் சமீபத்தில் மோடியின் பேச்சு இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி தற்போது பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் அல்லாமல் அம்பானி மற்றும் அதானியையும் அவருடன் சேர்த்து விமர்சனம் செய்துள்ளார்.

அம்பானி, அதானி புதிய ராஜாக்கள்..  மோடி அவர்களுக்காக 24 மணிநேரமும் உழைக்கிறார் - ராகுல் காந்தி

நரேந்திர மோடி தனது ஆட்சியில் 22-25 ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை உருவாக்கியுள்ளார் என்று இந்தியப் பிரதமர் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.

பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நரேந்திர மோடி தனது ஆட்சியில் 22-25 ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை உருவாக்கியுள்ளார், அவர்களின் புதிய பெயர்கள் அதானி மற்றும் அம்பானி.

அம்பானியும், அதானியும் ராஜா-வாக இருக்கும் வேளையில் நரேந்திர மோடி அவர்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறார்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்

கௌதம் அதானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் டாப் ஐந்து தொழிலதிபர்களுக்குப் பிரதமர் சாதகமாக இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதில் முக்கியமானதாக ராகுல் காந்தி அம்பானிக்கும் அதானிக்காகவும் நரேந்திர மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார் என்ற கூறியது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி மேலும் பேசுகையில், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பு, ஏழைகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். நிலம், இட ஒதுக்கீடு, கல்வி, சுகாதாரம் என எது உங்களுக்கு கிடைத்ததோ, அது அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டது.

மன்னர்களின் ஆட்சியைப் போன்ற இப்போதும் ஆட்சி செய்ய பாஜக விரும்புகிறது. அவர்கள் 22-25 பேர் கொண்ட அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறார்கள். நரேந்திர மோடி அவர்களுக்காக 24x7 வேலை செய்கிறார்.

பிஜேபி அவர்களது ஆட்சி காலத்தில் சில பில்லியனர்களை உருவாக்கினார்கள், நாங்கள் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்குவோம். இந்தியாவில் அனைத்து குடும்பங்களிலிருந்தும் தலா ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணம் நேரடியாக அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் என்றார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடியின் 'கடவுளால் அனுப்பப்பட்டவர்' என்ற கருத்து பெரும் சர்ச்சை ஆன நிலையில் ராகுல் காந்தி, "பிரதமர் மோடி கூறுகிறார், தான் எந்த முடிவும் எடுக்கவில்லை, அது பரமாத்மாவால் எடுக்கப்படுகிறது என்று கூறுகிறார். மேலும் அவர் தான் இயற்கையாகப் பிறந்தவர் அல்ல என்றும், பரமாத்மாவின் செய்தியாளர் என்று கூறுகிறார்.
அவர் ஏன் இந்த கதையை கூறுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா. தேர்தல் முடிந்ததும் அதானியைப் பற்றி ED அவரிடம் கேட்கும் போது, ​​அதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறுவார், மேலும் அவர் அவ்வாறு செய்யுமாறு பர்மாத்மா கேட்டுக் கொண்டார் எனவும் கூறி தப்பித்துக்கொள்வார் என ராகுல் காந்தி இக்கூட்டத்தில் பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகள் பற்றி கூற வேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம், அவர் வேலைகளை எப்படி முடக்கினார் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்வோம், இத்திட்டத்தை ராணுவம் விரும்பவில்லை என பேசினார்.

FAQs
ராகுல் காந்தி முன்மொழிந்த நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் குறித்து அவர் கூறிய கருத்து என்ன?

தங்களின் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் மாற்றப்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

நரேந்திர மோடி விரும்பும் ஆட்சி குறித்து ராகுல் காந்தி என்ன குற்றச்சாட்டை முன்வைத்தார்?

22-25 ஆட்சியாளர்களைக் கொண்ட ஆட்சியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட நரேந்திர மோடி முடியாட்சி போன்ற ஆட்சியை விரும்புவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.,

நரேந்திர மோடி, அம்பானி மற்றும் அதானி குறித்து எந்த சந்தர்ப்பத்தில் ராகுல் காந்தி தனது அறிக்கைகளை வெளியிட்டார்?

பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.,

அம்பானி மற்றும் அதானிக்காக பிரதமர் நரேந்திர மோடி செய்த பணி குறித்து ராகுல் காந்தி கூறியது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி அம்பானி மற்றும் அதானிக்காக 24x7 உழைக்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார்.,

ராகுல் காந்தி தனது உரையில் யாரை விமர்சித்தார்?

ராகுல் காந்தி தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோரை விமர்சித்தார்.,

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+