இந்தியாவின் நிதி தலை நகரமான மும்பை, வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பிடித்தமான நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு போர்டல் நாக்ரி. காம், வேலை தேடுபவர்களுக்கு மிக லாபகரமான நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் காலாண்டில் பணியமர்த்தலில் மும்பை 41 சதவீதம் வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
சம்பள உயர்வு
நாக்ரி அறிக்கையின் படி, தொற்று நோய்க்கு பிந்தைய காலத்தில் மகாராஷ்டிராவின் தலை நகர் சம்பள உயர்வில் 18% அதிகமான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது மற்ற நகரங்களின் பெரு நகரங்களை விட கணிசமாக அதிகமாகும். இது சராசரியாக 11 சதவீதத்திற்கும் மேல் சம்பள உயர்வை பதிவு செய்துள்ளது.
துறை வாரியாக பணியமர்த்தல்
இதுவே சராசரியாக பெங்களூரில் 15% வளர்ச்சியும், டெல்லியில் 12% வளர்ச்சியும், இந்தியாவில் 11% வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது.
இவ்வாறு பணியமர்த்தப்பட்டதில் வங்கி மற்றும் நிதி துறை, கல்வித் துறையில் 60% வளர்ச்சியும், ரியல் எஸ்டேட் துறையில் 57% வளர்ச்சியும், பார்மா துறையில் 34% வளர்ச்சியும், பிபிஓ துறையில் 22% வளர்ச்சியும் கண்டுள்ளன. இதில் குறிப்பாக மும்பை 41% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
எந்த துறையில் அதிகம்
அதேபோல பிரெஷ்ஷர்களுக்கான தேவையானது 50% அதிகரித்துள்ளது. சம்பள அதிகரிப்பில் 33% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த பணியமர்த்தலில் வங்கிகள், நிதி சேவை மற்றும் இன்சூரன்ஸ் துறை மற்றும் கல்வித் துறையானது பணியமர்த்தலில் மிகப்பெரிய அளவு உள்ளது.
தொலை தூரத்தில் இருந்தே பணி
அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு கடந்த ஆண்டினை காட்டிலும் 50% அதிகரித்துள்ளது. இளநிலை பட்டதாரிகளுக்கு மும்பையில் 75%மும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தற்போது மீண்டும் பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். எனினும் மும்பையில் தற்போதும் கூட வீட்டில் இருந்தே பணியாற்ற நிறுவனங்கள் அனுமதி கொடுத்துள்ளன. 4வது காலாண்டில் 11% பேர் தொலை தூரத்தில் இருந்தே வேலை பார்த்து வந்துள்ளதாக பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications