டெல்லி: இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் பான் கார்டு வைத்திருப்பதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 42.10 கோடி ஆண்களும் ,31.05 கோடி பெண்களும் பான் கார்டு வைத்துள்ளனர். மொத்தமாக பார்த்தால் இந்தியாவில் 74.67 கோடி பேரிடம் பான் கார்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 74.67 கோடி பான் கார்டுகளில் சுமார் 14 கோடி பான் கார்டுகள் இதுவரை ஆதாருடன் இணைக்கப்படவில்லை. எனவே இவை விரைவில் செயலற்றவையாக போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பான் கார்டு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நாட்டில் 67.67 கோடி பேர் பான் கார்டு வைத்திருந்தனர் அது இந்த ஆண்டு மார்ச் மாதம் 74.67 கோடி என அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகால இடைவெளியில் நாம் பார்க்கும் போது இது 2500% உயர்ந்துள்ளது 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் பான் கார்டு வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை 2.76 கோடி.
பான் கார்டு வைத்திருப்பவர்களில் கிட்டத்தட்ட 98 சதவீதம் பேர் தனிநபர்கள். அதேபோல பான் கார்டு வைத்திருப்பவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. Permanent Account Number -PAN, தமிழில் நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படுகிறது.
பொதுவாக பான் கார்டுகள் நிதி பரிமாற்றங்களுக்கு மிக முக்கியமானது.வரி செலுத்துவது மற்றும் வரி பெறுவது, முதலீடு ,வருமான வரி தாக்கல் ஆகியவற்றுக்கு பான் கார்டு கட்டாயம். இந்திய வருமானவரிச் சட்டம் கிட்டத்தட்ட 18 வகையான நிதி பரிமாற்றங்களுக்கு பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம் என கூறுகிறது.
இந்தியாவில் அண்மைக்காலமாக பெண்களும் அதிக அளவில் முதலீடு செய்வதன் காரணமாகவே பான் கார்டு வைத்திருக்கும் ஆண் பெண்களுக்கு இடையிலான வித்தியாசம் குறைந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள 74.67 கோடி பான் கார்டுகளில் 60.5 கோடி பான் கார்டுகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. பானுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கேடு கடந்த ஆண்டே முடிந்துவிட்டது.
இப்படி ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழந்து போனதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கால அவகாசத்தை தாண்டி 2023 ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு ஆதாருடன் பான் எண்ணை இணைத்தவர்களிடமிருந்து 601.97 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications