இந்தியாவில் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்ல ரயில்களை பயன்படுத்துபவர்களே அதிகம். இதில் திடீரென வெளியூர்களுக்கு பயணம் செய்யும் சூழலுக்கு ஆளாகுபவர்களுக்கு உதவுவதற்காக தான் தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு கொண்டுவரப்பட்டது.
தட்கல் டிக்கெட் ஏன் கிடைப்பதில்லை?: ஆனால் இத்தகைய தட்கல் டிக்கெட்டுகளை அத்தனை எளிதாக நம்மால் முன்பதிவு செய்துவிட முடியாது. தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவில் ஏஜென்ட்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.ஆன்லைனில் முன்பதிவு செய்ய காத்திருந்தாலும் பெரும்பாலான சாமானிய மக்களால் தக்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிவதில்லை. ஒரு நொடியில் அனைத்து டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.

தட்கல் டிக்கெட்டுக்கு ஈ ஆதார் கட்டாயம்: இந்த சூழலில் தான் தட்கல் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஈ ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது. அதாவது தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது ஆதார் எண் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதனை அடுத்து ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்ப்பு நடத்தப்பட்ட பின்னர் தான் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும் என்ற வகையில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது.
புகார்களை அடுத்து அரசு நடவடிக்கை: எனவே இனிவரும் காலங்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது பொதுமக்களுக்கு எளிதானதாக இருக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் கருதுகிறது. காலை 10 மணிக்கு தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு காத்திருந்தாலும் 90% பேருக்கு டிக்கெட் கிடைப்பது கிடையாது இது தொடர்பாக தொடர்ந்து மத்திய ரயில்வே துறை அமைச்சகத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்ட வண்ணம் இருந்தன.
2.5 கோடி போலி கணக்குகள் நீக்கம்: அண்மையில் 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐஆர்சிடிசி நீக்கியது. இந்த சூழலில் தட்கல் டிக்கெட்களை மக்கள் எளிதாக பெரும் வகையில் விரைவில் ஆதார் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஈ ஆதார் கட்டாயம் செய்யப்படும் இது உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்டு டிக்கெட்டுகளை பெற உதவும் என அஸ்வினி வைஷ்ணவி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருக்கிறார்.
ஜூன் மாத இறுதிக்குள் நடைமுறை?: ஜூன் மாத இறுதிக்குள் இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு தங்களுடைய ஈ ஆதாரை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஈ ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு அது சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் 10 நிமிடங்கள் ஏஜெண்டுகளுக்கு கிடைக்காது: மேலும் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வைத்திருக்கக்கூடிய பயணர்களுக்கு தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கும் போது முதல் 10 நிமிடங்கள் அவர்களுக்கான டிக்கெட் முன்பதிவுக்கான நேரமாக வழங்கப்படும். இந்த சமயத்தில் எந்த ஒரு ஏஜெண்டுகளாலும் தட்கல் டிக்கெடுகளை முன் பதிவு செய்ய முடியாது. எனவே ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைத்து பயன்படுத்தும் பயனாளர்கள் இனி எளிதாக தக்கல் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ள முடியும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications