பொதுவாக பான் அட்டையை வருமான வரி செலுத்துவதற்கு தான் பயன்படுத்தப்படுகிறது என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பான் அட்டையை வைத்து பல காரியங்களைச் செய்யலாம்.
பல இடங்களில் பான் அட்டை அவசியம், பல இடங்களில் பான் அட்டையை அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பான் அட்டையை எங்கு எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற விவரங்களை இப்போது பார்ப்போம்.

1. வாகனங்களை வாங்கும் போது அல்லது விற்கும் போது அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. வங்கிக் கணக்கைத் தொடங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. வங்கியில் ஒரு டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார்ட் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய மற்றும் டீமேட் கணக்கைத் தொடங்க பான் கார்ட் அவசியம். அங்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. உணவகங்களிலோ அல்லது ஹோட்டல்களிலோ 50,000 ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் பான் அட்டை கொடுக்க வேண்டும்.
6. வெளிநாட்டு பயணங்களுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் பணமாக செலவழித்தாலோ அல்லது, வெளிநாட்டு கரன்ஸிகளை மாற்றினாலோ பான் அட்டை கொடுக்க வேண்டும்.
7. ஒரே நாளில் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் அட்டை கொடுக்க வேண்டும். இப்போது பெரும்பாலான வங்கிகள் வங்கிக் கணக்கை தொடங்கும் போதே பான் அட்டையை கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள்.
8. ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் கொடுத்து வங்கி டிராஃப்ட் அல்லது பே ஆர்டர்கள் அல்லது வங்கி காசோலைகளை வாங்கினால் பான் அட்டை அவசியம்.
9. வங்கியில் போடும் ஃபிக்ஸட் டெபாசிட் தொகை 50,000 ரூபாயை விட அதிகமாக ஒரே நாளில் டெபாசிட் செய்தால் அல்லது ஒரு வருடத்துக்குள் 5 லட்சம் ரூபாயைக் கடந்தால் பான் அட்டை அவசியம்.
10. 50,000 ரூபாய்க்கு மேல் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தினால் பான் அவசியம்.
11. பங்குகள் தவிர, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மற்ற செக்யூரிட்டீஸ்களை வாங்கினால் பான் அவசியம்.
12. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பட்டியலிடப்படாத பங்குகளை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் பான் அவசியம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications