சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளைத் தொடர்ந்து, நேபாளத்திலும் எவரெஸ்ட், MDH ஆகிய பிரபல மசாலா பிராண்டுகளின் உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டுக்கும் மற்றும் விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கும் முக்கிய மற்றும் முதன்மையான காரணம், இந்த மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் கலப்படம் இருப்பதாக எழுந்த சந்தேகமே. ANI வெளியிட்ட தகவல்படி, நேபாள உணவு தரக் கட்டுப்பாட்டுத் துறை இரு இந்திய மசாலா பிராண்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் ஈத்திலைன் ஆக்ஸைடு (Ethylene Oxide) என்ற கெமிக்கல் இருக்கிறதா என்று பரிசோதனைகளை செய்ய தொடங்கியுள்ளது.

நேபாள நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உணவுப் பொருட்களின் தரத்தையும் உறுதி செய்வதில் நேபாள அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நேபாள உணவு தரக் கட்டுப்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ண மகாராஜன் கூறுகையில், "எவரெஸ்ட் மற்றும் MDH பிராண்டுகளின் மசாலாக்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விற்பனையும் சந்தையில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை, மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதையே உறுதிப்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த இரு பிராண்டுகளின் மசாலாக்களிலும் வேதிப்பொருட்கள் இருப்பதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இறுதி அறிக்கை கிடைக்கும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவரெஸ்ட் மற்றும் MDH ஆகியவை இந்தியாவில் பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் பிரபலமான மசாலா பிராண்டுகளாகும். இந்தியா மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் இவை, நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
ஈத்திலைன் ஆக்ஸைடு (Ethylene Oxide) என்றால் என்ன?: ஈத்திலைன் ஆக்ஸைடு என்பது மருத்துவ உபகரணங்களை கிருமி நீக்கம் செய்வதற்கும், சில வேதிப்பொருட்களின் தயாரிப்பிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நிறமற்ற வாயுவாகும். இருப்பினும், உணவுப் பொருட்களில் இதன் பயன்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயை உண்டாக்கும் அபாயம்: உலகளவில் பல சுகாதார அமைப்பு, புற்றுநோய் ஆராய்ச்சி மையம் (IARC) உட்பட ஈத்திலைன் ஆக்ஸைடு மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென் என வகைப்படுத்தியுள்ளன.
ஈத்திலைன் ஆக்ஸைடுக்கு நீண்டகாலமாகத் தொடர்ந்து மக்கள் நுகரும்போதும், இந்த வாயு கலந்த பொருட்கள் சாப்பிடும் போதும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications