சென்னையில் தான் தொழிற்சாலை அமைக்கனும்.. அமெரிக்க நிறுவனம் உறுதியான முடிவு..!!

சர்வதேச அளவில் வைஃபை மற்றும் இணையதள சேவைகளுக்கு தேவையான வன்பொருட்களை தயாரித்து வழங்கக்கூடிய உலகின் முன்னணி நிறுவனமான நெட்கியர் (Netgear) இந்தியாவில் முதலீடு செய்து ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது நெட்கியர் நிறுவனம். கிட்டத்தட்ட 22 நாடுகளில் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. தனிப்பயன்பாடு, அலுவலகங்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கு தேவையான வைஃபை மற்றும் ரௌட்டர்கள் உள்ளிட்ட இணையதள வசதிக்கு தேவையான கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

சென்னையில் தான் தொழிற்சாலை அமைக்கனும்.. அமெரிக்க நிறுவனம் உறுதியான முடிவு..!!

இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் முதலீடு செய்து தங்கள் ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்திய சந்தையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் நெட் கியர் நிறுவனம் இந்தியாவில் தங்களது ஊழியர்களை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதே வேளையில் இந்தியாவினுள் தங்களது தயாரிப்பு ஆலையை நிறுவுவதற்கும் இந்த நிறுவனம் வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது.

நெட்கியர் நிறுவனத்தின் கமர்சியல் வணிகத்தை பொறுத்தவரை அதன் வருவாயில் 10% இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. நிறுவனத்தில் உள்ள 650 ஊழியர்களில் 65 பேர் இந்தியாவில் உள்ளனர்.

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவது மற்றும் இந்தியாவில் இணையதள வசதிகளுக்கான தேவை அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்களது நிறுவனம் இங்கே மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என நெட்கியர் நிறுவனம் நம்புகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் இந்தியாவிற்கு உள்ளேயே உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. ஆனால் இதற்கான தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தங்களது ஆலை இந்திய பொருளாதாரத்திற்கும் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவும் என இதன் தலைமை கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில் நெட் கியர் நிறுவனம் இந்தியாவில் உள்ள தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தற்போது 20 நகரங்களில் தங்களது சேவைகளை வழங்கி வரக்கூடிய நெட்கியர் நிறுவனம் கூடிய விரைவில் இதனை 30 நகரங்களுக்கு என விரிவுப்படுத்த இருப்பதாக கூறியுள்ளது.

இந்த நிறுவனம் பெங்களூருவில் இரண்டு இடங்களில் புதிதாக அலுவலகங்களையும் திறந்துள்ளது. இதில் 20,000 சதுர அடியில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அலுவலகம் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தை பொறுத்தவரை வைஃபை இணைப்பு கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+