மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு பல முயற்சிகளைச் செய்து வரும் எலான் மஸ்க், அவருடைய வியப்பளிக்கும் வெற்றி பயணத்தில் புதிய மைல்கல்லாக அவருடைய நியூராலிங்க் நிறுவனம் அமெரிக்க அரசின் ஒப்புதலை தொடர்ந்து முதல் முறையாக மனித மூளையில் சிப் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளது.
எலான் மஸ்க் 2016ல் நியூராலிங்க் என்னும் நியூரோடெக்னாலஜி நிறுவனத்தை நிறுவினார், இந்நிறுவனம் மனித மூளைக்கும், கம்ப்யூட்டருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் வெற்றியாக நரம்பியல் தொடர்பான வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் எனக் காட்டியுள்ளார்.

எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் உருவாக்கியுள்ள சிப் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ALS, Parkinsons போன்ற நரம்பியல் தொடர்பான வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் எனப் பல சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தச் சிப் குரங்குகளுக்கு வைத்துப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் ஆய்வு முடிவுகளை அமெரிக்க FDA அமைப்பிடம் முன்வைக்கப்பட்டுச் சில மாதங்களுக்கு முன் மனித மூளையில் சிப் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நியூராலிங்க் பல கட்ட ஆய்வுகளைச் செய்து ஒரு நோயாளியை தேர்வு செய்தனர். தற்போது இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருடைய மூளையில் சிப் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சிப் வைக்கப்பட்டதில் ஆரம்பக்கட்ட தீர்வுகளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நியூரான் ஸ்பைக் கிடைத்துள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். நியூராலிங்க் உருவாக்கியுள்ள இந்தச் சிப் பெயர் "Link", இது 5 நாணயங்களை அடுக்கி வைத்தது போல் வடிவத்தில் இருக்கும்.
கலிப்போர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூராலிங்க் நிறுவனத்தில் இதுவரையில் 400 பேர் பணியாற்றும் வேளையில் 363 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகத் திரட்டியுள்ளது. எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் உருவாக்கிய இந்தக் கட்டமைப்பின் பெயர் brain-computer interface research அல்லது ப்ரைன் மெஷின் என அழைக்கப்படுகிறது. இத்துறையில் நியூராலிங்க் முன்னோடியாக உள்ளது.
மேலும் இந்தச் சிப் வைக்க மண்டை ஓட்டை திறக்கும் கடினமான அறுவை சிகிச்சை தேவையில்லை, invasive surgery எனப்படும் துளையிட்டு ஊடுருவும் அறுவை சிகிச்சை மூலம் சிப் மனித மூளைக்குள் பொருத்தப்படும்.
நியூராலிங்க் நிறுவனத்திற்கு முன்பு 2022 ஜூலை மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் Synchron என்னும் நிறுவனம் உருவாக்கிய சிப் அமெரிக்க நோயாளி மூளையில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications