காலையில் எழுந்து ரெடியாகி, போக்குவரத்து நெரிசல்களை கடந்து சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு செல்வது என்பது பெரிய போராட்டமாகி விட்டது. வாகனம் பழுதாவது, போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களால் சில சமயங்களில் நாம் அலுவலகத்துக்கு தாமதமாக செல்ல நேரிடுகிறது. ஆனால் இது வரை நாம் கேள்விப்படாத ஒரு பிரச்னையால் இங்கே ஒருவர் அலுவலகத்திற்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
பிரதிக் ராய் என்பவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தான் குறித்து சமூக வலைதளங்களில் தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதிக் ராய் வழக்கம் போல அலுவலகத்திற்கு செல்ல தயாராகியுள்ளார். தன்னுடைய ஏதெர் மின்சார ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துள்ளார், அப்போது ஸ்கூட்டர் அப்டேட்டிங் என திரையில் காட்டியுள்ளது. இதனை புகைப்படமெடுத்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது ஒரு புது பிரச்சனை, காலையில் வேலைக்கு செல்வதற்காக நான் என்னுடைய ஏதர் ஸ்கூட்டரை ஸ்டார் செய்தேன், ஆனால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை மாறாக அது அப்டேட் ஆகி கொண்டு இருக்கிறது, அலுவலகத்திற்கு லேட்டாக தான் செல்லப் போகிறேன் என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கான எக்ஸ் தள பயனாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பகிரப்பட்டது முதல் சுமார் நான்கு லட்சம் பேர் இந்த பதிவை பார்த்துள்ளனர். மேலும் 5 ஆயிரம் பேர் இதனை லைக் செய்துள்ளனர்.
பலர் இது ஆச்சரியம் தருகிறது என கூறியுள்ளனர். ஒரு பயனாளரோ ஆக்டிவா தான் சிறந்த ஸ்கூட்டர் எனக் கூறியுள்ளார். மற்றொரு பயனாளரோ வேலை எப்போது வேண்டுமானாலும் வரும் போகும், ஆனால் அப்டேட் என்பது தான் உங்களுக்கு பாதுகாப்பானது எனக் கூறியுள்ளனர்.
வேலைக்கு போய்க் கொண்டிருக்கும் போது பாதியில் அப்டேட் ஆகவில்லை அதுவரைக்கும் பரவாயில்லை என ஒருவர் கூறியுள்ளார். ஒரு பயனாளர், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அலுவலகங்கள் இனி இதனை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications