இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்புகளின் வளர்ச்சி பணப் பரிமாற்றங்களை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்புவது மிகவும் சுலபமாகிவிட்டது. வங்கிக்கு சென்று சலானை பூர்த்தி செய்து வரிசையில் காத்திருக்க வேண்டிய காலமெல்லாம் மலையேறி ரொம்ப நாளாச்சு. யுபிஐ, மொபைல் பேங்கிங் அல்லது இணையதளம் வாயிலாக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அனுப்ப முடியும்.
ஜிபே போன்ற யுபிஐ பரிமாற்ற முறையில் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய நமக்கு உதவுவது IMPS, NEFT, RGTS போன்றவை. இதில் IMPS எனப்படும் உடனடி பரிமாற்ற சேவையில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் அடிக்கடி IMPS முறையில் பணம் அனுப்புபவர் என்றால் இது உங்களுக்கான செய்தி தான்.

IMPS என்றால் என்ன?
IMPS என்பது ஒரு நிகழ்நேர கட்டண முறை. இதன் மூலம் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இது நேஷனல் பேமண்ட்ஸ் ஆஃப் இந்தியா வழங்கும் ஒரு சிறப்பு வசதி. இரவு, பகல் என வங்கி செயல்பாட்டு நேரங்களை கணக்கில் கொள்ள வேண்டிய தேவையில்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பணத்தை அனுப்பலாம். ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை அனுப்ப பெரும்பாலானவர்கள் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.
பிப்.1 முதல் IMPSக்கு புதிய விதி:
வழக்கமாக IMPS முறையில் பணம் அனுப்ப வேண்டுமெனில், நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் வங்கி கணக்கு எண், வங்கி பெயர் மற்றும் IFSC குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து பயனாளியாக(beneficiary) சேர்த்திருக்க வேண்டும். பயனாளியானது உறுதி செய்யப்பட்ட பின்னரே பணம் அனுப்ப முடியும். சில வங்கிகளில் இப்படி பயனாளியை சேர்க்க 24 மணி நேரம் ஆகும்.
ஆனால் பிப்ரவரி 1ஆம் தேதி ஒருவரது வங்கி கணக்கை பயனாளியாக சேர்க்காமலேயே ரூ.5 லட்சம் வரை IMPS முறையில் அனுப்ப முடியும். தி நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு கிளிக்கில் ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம்:
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPSஇல் பணம் அனுப்புவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஒருவரது வங்கி கணக்கு எண், IFSC குறியீடு ஆகியவை இனி தேவையில்லை. யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர் மற்றும் அவரது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் இந்த இரண்டை மட்டும் வைத்து ரூ.5 லட்சம் வரை ஒரே கிளிக்கில் பணம் அனுப்ப முடியும்.
இதற்கு ஏற்ற வகையில் செயலிகளிலும் இணையதள பரிமாற்றங்களிலும் அப்டேட் செய்யும்படி நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கடந்த ஆண்டே வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டது. எனவே உங்கள் மொபைல் பேங்கிங் செயலியை அப்டேட் செய்தால் இந்த வசதி கிடைக்கும்.

எப்படி பணம் அனுப்புவது?
Step 1: மொபைல் பேங்கிங் செயலிக்கு சென்று 'Fund Transfer' பிரிவை தேர்வு செய்யவும்.
Step 2: 'IMPS' என்பதை கிளிக் செய்யவும்
Step 3: யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது செல்போன் எண் மற்றும் வங்கியின் பெயரை உள்ளீடு செய்யவும்
Step 4: ரூ.5 லட்சத்திற்குள் நீங்கள் அனுப்ப வேண்டிய பணத்தை உள்ளீடு செய்யவும்
Step 5: 'Confirm' என்பதை கிளிக் செய்து OTPஐ உள்ளீடு செய்தால் போதும் பணம் சென்று விடும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications