பழைய வருமான வரி கணக்கு முறைக்கு முடிவு கட்டுகிறதா மத்திய அரசு? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு?

மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான வரி செலுத்துவோர் புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனாலும், வீட்டுக் கடன்கள் மற்றும் நீண்டகால முதலீடுகளைக் கொண்டுள்ளவர்களுக்குப் பழைய வரி முறை இன்னும் பயனுள்ளதாக இருக்கிறது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்காக ஜூலை 31, 2024 வரை தாக்கல் செய்யப்பட்ட 7.28 கோடி வருமான வரிக் கணக்குகளில், 5.27 கோடி (72%) வரி செலுத்துவோர் புதிய முறைக்கு மாறியுள்ளனர். எனவே பழைய வருமான வரி முறையின் எதிர்காலம் குறித்த கேள்வி தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. புதிய வருமான வரி முறை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பழைய வரி முறையின் எதிர்காலம் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

பழைய வருமான வரி கணக்கு முறைக்கு முடிவு கட்டுகிறதா மத்திய அரசு? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு?

பழைய வரி முறை உடனடியாக முடிவுக்கு வருவது சாத்தியமில்லை என்றாலும், அதற்கான ஒரு காலக்கெடுவை பட்ஜெட் நிர்ணயிக்கலாம் என ஒரு தரப்பு கருதுகிறது. எனினும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைய குறைய, பழைய வரி முறை தானாகவே நீர்த்துப்போக அனுமதிக்கப்படலாம் என மற்றொரு தகவல் வட்டாரம் சுட்டிக்காட்டியது.

”நீண்டகால முதலீடுகள், சேமிப்புகள் அல்லது வீட்டுக் கடன்கள் உள்ள சில வரி செலுத்துவோருக்குப் பழைய வரி முறை தொடர்ந்து பயனுள்ளதாகவே உள்ளது," என சிலர் கருதுகின்றனர். 2025-26 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையில் அறிவிக்கப்பட்ட சலுகைகளால், அதன் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

ரூ7 லட்சம் தள்ளுபடி வரம்பு நீக்கப்பட்டு, ரூ12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்ற அறிவிப்பு முக்கியமானது. மேலும், புதிய வரி முறையில் வரி அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ24 லட்சத்திற்கு மேல் ஈட்டுவோருக்கு 30% வரி அடுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இம்மாற்றங்கள் புதிய முறைக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன.

பழைய வரி முறை நீண்டகால சேமிப்புகளைத் தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும், இது நாட்டுக்கு அத்தியாவசியத் தேவையாகவும் பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏகேஎம் குளோபல் (AKM Global) வரி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் அமித் மகேஸ்வரி கூறுகையில், "அரசு புதிய வரி முறையை அதன் எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் குறைந்த ஆவணத் தேவைகளுக்காக தீவிரமாக விளம்பரப்படுத்தி வந்தாலும், பழைய முறையை முற்றிலும் நீக்குவது பெரும் கவலைகளை எழுப்பலாம்."

மகேஸ்வரி மேலும் கூறுகையில், "பழைய முறை பிபிஎஃப் (PPF), ஈஎல்எஸ்எஸ் (ELSS), காப்பீடு மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற முதலீடுகள் வழியாக நிதி ஒழுக்கத்தை ஊக்குவித்தது. அத்துடன், மருத்துவக் காப்பீடு மற்றும் சமூகப் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சலுகைகள் இல்லாமல் புதிய முறைக்கு முற்றிலும் மாறுவது, வரிச் சலுகைகள் மற்றும் தனிப்பட்ட இடர் தணிப்பு நடவடிக்கைகளிலிருந்து அரசு படிப்படியாக விலகுவதாகக் கருதப்படலாம்" என்கிறார்.

தற்போதைய சூழலில், மேம்பட்ட நிதி அறிவும், முதிர்ச்சியடைந்த முதலீட்டுச் சூழலும் இருப்பதால், பழைய வரி முறையிலிருந்து அரசு விலகிச் செல்வது சிரமமாக இருக்காது என்றும் மகேஸ்வரி குறிப்பிட்டார். வரி செலுத்துவோர் எளிமையான புதிய அணுகுமுறையை அதிகம் விரும்புவதாகவும், வரி திட்டமிடலையும் முதலீட்டு முடிவுகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதில்லை என்றும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் அவர் மேலும் விளக்கினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+