தெலுங்கானாவில் புதிய பாமாயில் சுத்திகரிப்பு நிலையம்.. புதிய காங்கிரஸ் அரசின் முடிவு என்ன..?

இந்தியாவில் பாமாயில் பயன்பாடு சமையலில் அதிகரித்து வருகிறது. காரணம் அதன் விலை மிகவும் குறைவாகும். சிறிய ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், தெருவோர கடைகளில் முழுக்க முழுக்க பாமாயில்தான் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் அதன் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியா பாமாயில் இறக்குமதியை நம்பிதான் இருக்கிறது. இந்த நிலைமையை மாற்றுவதற்கு தெலுங்கானா மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தெலுங்கானாவில் புதிய பாமாயில் சுத்திகரிப்பு நிலையம்.. புதிய காங்கிரஸ் அரசின் முடிவு என்ன..?

தெலுங்கானா மாநில கூட்டுறவு எண்ணெய் வித்துகள் விவசாயிகள் அமைப்பு, அஸ்வாராபேட்டை-யில் தினமும் 100 டன் பாமாயிலை உற்பத்தி செய்வதற்கான சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கத் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த நிலையில் பாமாயில் விவசாயிகள் மத்தியில் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது.
கம்மம் மாவட்டத்தில் உள்ள அஸ்வாராபேட்டையில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. அஸ்வாராபேட்டை பகுதியில் நிறைய பாமாயில் மரங்கள் விளைகின்றன. 80,000 ஏக்கர் பரப்பில் கம்மம், பத்ராத்ரி கோத்தாகூடம் மாவட்டங்களில் பாமாயில் மரங்கள் சாகுபடி நடக்கிறது.

தெலுங்கானா மாநில கூட்டுறவு எண்ணெய் வித்துகள் விவசாயிகள் அமைப்பு அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில் அஸ்வாராபேட்டை, தம்மபேட்டை கிராமங்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் டன் பாமாயில் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

எனவே அஸ்வாராபேட்டையில் தினமும் 100 டன் பாமாயில் சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்கவேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. இதற்கு ரூ.100 கோடி தேவைப்படும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

முந்தைய சந்திரசேகர ராவ் ஆட்சியில் சில அரசியல்வாதிகளின் செல்வாக்கால் அஸ்வாராபேட்டையில் செயல்பட்டு வந்த சுத்திகரிப்பு நிலையங்களை சித்திப்பேட்டைக்கு மாற்றிவிட்டனர். அந்தப் பகுதியில் ஆண்டுக்கு 5 டன் பாமாயில் மட்டுமே உற்பத்தி செய்கிறது. விளைச்சலும் அங்கு குறைவுதான், இப்போது புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு டெண்டர் விடும் நிலையில் உள்ளது.

சித்திப்பேட்டையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு பதிலாக அதிகளவு பாமாயில் மரங்கள் விளையும் அஸ்வாராபேட்டையில் அமைப்பது தான் விவசாயிகளுக்கு நல்லது என்று வாதிடப்படுகிறது.
அஸ்வாராபேட்டையைச் சேர்ந்த பாமாயில் விவசாயி கே ஸ்ரீனிவாஸ் இதுபற்றி கூறுகையில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமையவிருப்பதால் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாகக் கூறினார்.

சித்திப்பேட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்றும் அது பொருத்தமற்ற காரியம் என்றும் சம்மேளனத்தின் தலைவர்கள் மகேஸ்வர ரெட்டி, புல்லையா, அடப்பா லச்சையா தோரா ஆகியோர் கூறுகின்றனர்.

அஸ்வாராபேட்டையில் இருந்து தம்மபேட்டை ஆலைகளுக்கு மூலப் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்கின்றனர். இதுகுறித்து அஸ்வாராபேட்டையின் புதிய எம்எல்ஏ ஜாரே அதிநாராயணா முதல்வர ரேவந்த் ரெட்டியை சந்தித்து வலியுறுத்தப் போவதாகவும் அதற்கு விவசாயத் துறை அமைச்சர் தும்மாலா நாகேஸ்வர ராவும் ஆதரவு தந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அஸ்வாராபேட்டை, தம்மபேட்டையில் உள்ள இரண்டு ஆலைகளில் மட்டும் 3 லட்சம் டன் பாமாயில் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+