இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் வாடகை சந்தையில் அதிக ஒழுங்கையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு புதிய வாடகை ஒப்பந்த விதிகள் 2025-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மாதிரி குத்தகை சட்டம் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகளை அடிப்படையாக கொண்ட இந்தச் சீர்திருத்தங்கள், வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இருவருக்கும் பயன்படும் ஒரு பொதுவான நிலையான அமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.
ஒப்பந்தப் பதிவு கட்டாயம் : புதிய விதிகளின் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், இனிமேல் ஒவ்வொரு வாடகை ஒப்பந்தமும் கையெழுத்திட்ட இரண்டு மாதங்களுக்குள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறையை மாநில சொத்துப் பதிவு இணையதளங்கள் மூலமாகவோ அல்லது உள்ளூர் பதிவாளர் அலுவலகங்கள் மூலமாகவோ முடிக்கலாம். இந்த காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தைப் பதிவு செய்யத் தவறினால், ரூ.5,000 அபராதம் செலுத்த நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகைதாரர்களுக்கான முக்கிய விதிகள் : இந்த சட்டத்தில் வாடகைதாரர்களுக்குச் சாதகமான பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பணம் (Deposit), வாடகை உயர்வு மற்றும் வெளியேற்றம் குறித்த விதிகள் எளிமையாக்கப்பட்டு, தெளிவாகப் புரியும்படி மாற்றப்பட்டுள்ளன.
அதாவது, ஒப்பந்தம் செய்த இரண்டு மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக இரண்டு மாத வாடகை தொகை மட்டுமே முன்பணமாக வசூலிக்க முடியும். வணிக ரீதியிலான சொத்துகளுக்கு இது 6 மாத வாடகை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாடகை உயர்த்துவது தொடர்பான விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். இது குறித்து முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.
மேலும், வாடகைதாரர்களை திடீரென வெளியேறச் சொல்ல முடியாது. வெளியேற்றுவதற்குச் சட்டரீதியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதேபோல், சண்டைகளை தீர்க்க சிறப்பு வாடகை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்றும் இவை 60 நாட்களுக்குள் முடிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு உரிமையாளர்களுக்கான பலன்கள் : வாடகை வருமானத்திற்கான TDS விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாடகை வருமானம் இனி 'வீட்டுச் சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானம்' என்ற தலைப்பின் கீழ் பட்டியலிடப்படும். இது வரி தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வருடத்தில் வாடகைதாரர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை வாடகை செலுத்தத் தவறினால், அவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வசதியாக தீர்ப்பாயத்தை நாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாடகையை கட்டுப்படியாக கூடிய அளவில் வைத்திருக்கும் அல்லது ஆற்றல் திறன் மேம்பாட்டுச் சீரமைப்புகளைச் செய்யும் உரிமையாளர்களுக்கு சில வரி சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
ஒப்பந்தத்தை பதிவு செய்வது எப்படி..?: புதிய விதிகள் அமலுக்கு வரும்போது, டிஜிட்டல் ஆவணப் பதிவு பொதுவானதாக மாறும். வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இருவரும் தங்கள் அடையாள சான்றுகளைப் பதிவேற்றி, வாடகை மற்றும் சொத்து விவரங்களை உள்ளிட்டு, மின்னணு முறையில் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய முடியும். இந்த சட்டம் அமலாகும் போது, வாடகை சந்தை வெளிப்படையானதாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் மாறும் என்று நம்பப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications