இந்தியா சீனா இடையான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தாலும், இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் வர்த்தகப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு இந்தியாவில் இயங்கி வந்த சீன நிறுவனங்களின் சேவைக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து சீனா முதலீடுகளுக்குப் பல்வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதித்தது.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் மத்திய அரசு இந்தியாவில் வரும் அனைத்து அன்னிய முதலீடுகளையும் ஆய்வு செய்யத் திட்டமிட்ட நிலையில், இந்திய நிறுவன சட்டங்கள் கீழ் 10 சதவீதம் பங்கு முதலீடுகளை ஆய்வு செய்யலாம் எனப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் கடந்த 6 மாத காலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக எவ்விதமான அளவீடும் இல்லாமல் அனைத்து அன்னிய முதலீடுகளையும் அதாவது சிறிய அளவிலான முதலீடு அல்லது பங்கு இருப்பு கைப்பற்றும் முதலீடுகளையும் அரசு ஆய்வு மற்றும் ஒப்புதலுக்குப் பின்பு தான் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் "significant beneficial ownership" என்ற அளவீட்டை மத்திய அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது. இந்த அளவீட்டின் மூலம் சீன நிறுவனங்கள் பிற நாடுகளில் இருந்து அதாவது சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து செய்யப்படும் முதலீடும் இந்த அளவீட்டில் கீழ் எளிதாகக் கணித்துவிட முடியும் என்பது தான்.
இந்நிலையில் அன்னிய முதலீடுகள் குறித்து மத்திய அரசின் ஆலோசனை மற்றும் முடிவுகளை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூர்ந்து கவனித்து வருகிறது. குறிப்பாகப் பேடிஎம், சோமேட்டோ, பிக்பேஸ்க்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பெருமளவிலான சீன முதலீட்டில் இயங்குவதால் ஸ்டார்ட்அப் முதலீட்டுச் சந்தையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்திய நிறுவனங்கள் மீதான பல சீனா முதலீடுகள் இன்னும் மத்திய அரசு அனுமதி பெறாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தோடு ஆலோசனை செய்து அன்னிய முதலீடுகளைத் தணிக்கை செய்வது குறித்த வரையறைகளை இந்த வாரம் நடக்கும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாகக் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சீனா, சிங்கப்பூர், மொரீஷியஸ், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து வரும் முதலீடுகள் அனைத்தும் மத்திய அரசின் சிறப்பு வரையறை கீழ் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். இதில் தைவான் நாட்டில் இருந்து வரும் முதலீடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீனா ராணுவங்களுக்கும் மத்தியில் ஏற்பட்ட வர்த்தகத் தடையின் எதிரொலியாகத் தான் தற்போது மத்திய அரசு சீன முதலீடுகளைக் குறிவைத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதனால் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மிகப்பெரிய முதலீட்டு ஆதிக்கம் செலுத்தும் டென்சென்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்களையும், இந்நிறுவனங்களின் முதலீட்டை நம்பி வர்த்தகம் செய்யும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இது பெரிய அளவில் பாதிக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications