உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றான டிவிட்டர்-ன் சிஇஓ பதவியில் இருந்து இதன் நிறுவனர் ஜாக் டோர்சி வெளியேறிய நிலையில், இந்த முக்கியமான உயர் பதவியை இந்தியரான பாரக் அகர்வால்-க்கு கொடுத்தார். அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தில் மேலும் ஒரு இந்தியர் தலைமை பதவியைப் பெற்றதை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பராக் அகர்வால்-ன் சிஇஓ பதவிக்குக் கிடைக்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருக்கும் முன்னணி ஸ்டார்ட்அப் மற்றும் ஐடி சேவை நிறுவனத்திலேயே சிஇஓ-க்கள் பல கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறும் போது டிவிட்டர் போன்ற உலகளாவிய நிறுவனத்தில் சிஇஓ-வாக இருக்கும் பராக் அகர்வால்-ன் சம்பளம் எவ்வளவு இருக்கும்.
பராக் அகர்வால்
பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பதவியேற்றியதன் மூலம் அதிகப்படியான சம்பளம், சலுகை, பங்குகள் கிடைக்க வாய்ப்பு நிச்சயம் உள்ளது. இதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகள் பட்டியலில் 37 வயதான பராக் அகர்வால் இடம்பெறுவார் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
டிவிட்டர்
பேஸ்புக், ஸ்னாப்சாட், டிக்டாக் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியைக் காட்டிலும் டிவிட்டர் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது சற்று குறைவாகத் தான் உள்ளது. ஆனால் வேறு எந்தத் தளத்திலும் இல்லாத வகையில் டிவிட்டர் தளத்தில் வாடிக்கையாளர்கள் Loyalty மிகவும் அதிகம். இப்படி இருக்கும் நிலையில் டிவிட்டரின் அடிப்படை கொள்கையை எந்த வகையிலும் மாற்றாமல் நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் மிக முக்கியமான பொறுப்பு இளம் சிஇஓ-வான பராக் அகர்வால்-க்கு உண்டு.
சம்பளம்
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் அமர்ந்துள்ள பராக் அகர்வால் தனது வருடாந்திர சம்பளமாக 1 மில்லியன் டாலர் தொகையைப் பெற உள்ளார். இதேபோல் 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை (restricted stock units) 16 காலாண்டுகளுக்குப் பெற உள்ளார். அதாவது அடுத்த 4 வருடங்களுக்குப் பிரித்து பெற உள்ளார்.
ஜாக் டோர்சி சம்பளம்
இதற்கு முன்பு இப்பதிவியில் இருந்த டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்சி இந்நிறுவனத்தின் 2.5 சதவீத பங்குகளை வைத்திருந்தாலும், 2018ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு வெறும் 1.4 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகிறார்.
பிற இந்திய தலைவர்கள் சம்பளம்
இந்நிலையில் ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை 281 மில்லியன் டாலரும், மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா 43 மில்லியன் டாலரும், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிகேஷ் அரோரா 128 மில்லியன் டாலரும், அடோப் சாந்தனு நாராயண் 39.2 மில்லியன் டாலரும், ஐபிஎம் அர்விந்த் கிருஷ்ணா 1.5 மில்லியன் டாலர் அளவிலான சம்பளத்தைப் பெறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications