யுபிஐ (UPI) மூலம் பணம் பரிமாற்றங்கள் இன்று மிக விரைவாகவும், பரவலாகவும் நடந்து வருகின்றன. பெட்டிக்கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வரை யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) கூறியது போல, ஒரு செகண்டுக்கு சுமார் 7,000 பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இதனால், ஒரு நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்தில் எத்தனை பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் எளிதாக கற்பனை செய்யலாம். இதன் காரணமாக, யுபிஐ சேவையில் பல விதமான புதிய விதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.
நீங்கள் UPI மூலம் பண பரிவர்த்தனைகள் செய்வீர்கள் என்றால், ஆகஸ்ட் 1, 2025 முதல் சில புதிய விதிகள் நடைமுறைக்கு வருகிறது. உதாரணமாக PhonePe, Google Pay, Paytm போன்றவை, பண பரிமாற்றத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

இதில் முக்கியமானவை (உங்கள் வங்கி கணக்கு இருப்பு சரிபார்த்தல், பரிவர்த்தனை நிலையை (transaction status) உறுதி செய்தல், மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் பட்டியல், ஆட்டோமேட்டிக் பணம் செலுத்தும் (auto-pay mandate) சேவைகளுக்கு விதிக்கப்பட்ட வரம்புகள்)
இந்த புதிய விதிகள், பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் நடத்த உதவும். எனவே, உங்கள் UPI பயன்பாட்டில் இதைப் பற்றி விழிப்பாக இருக்க வேண்டும்.
பேலன்ஸ் சரிபார்ப்பு லிமிட் (Balance check limit) : கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் உங்கள் வங்கி பேலன்ஸ் சரிபார்க்கும் முறையில் புதிய விதி அமல் ஆகிறது. ஆகஸ்ட் 1, 2025 முதல், ஒவ்வொரு யுபிஐ ஆப்பிலும் 24 மணி நேரத்திற்கு உங்களுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டும் பேங்க் பேலன்ஸ் பார்க்க அனுமதிக்கப்படும். இதனால், ஒரு நாளில் கூகுள் பேயில் 50 முறை, போன்பேயில் 50 முறை என, ஒவ்வொரு ஆப்பிலும் தனித்தனியே 50 முறை பேலன்ஸ் சரிபார்க்க முடியும்.
பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு (Transactions Status Check) :சர்வீஸ் புரொவைடர்கள் அல்லது வங்கிகள் மூலம், ஒரு பரிவர்த்தனையின் நிலையை சரிபார்க்கும் எண்ணிக்கை புதிய விதிகளின் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனி, 2 மணி நேரத்தில் அதிகபட்சம் 3 முறை மட்டும் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்கலாம். இதில், இரண்டு சரிபார்ப்பு முயற்சிகளுக்கிடையில் குறைந்தது 90 நொடிகள் இடைவெளி இருக்க வேண்டும். மேலும், ஒரு பரிவர்த்தனை முடிந்ததும், அதை சரிபார்க்க 45 முதல் 60 நொடிகள் வரை காத்திருந்து பார்க்க வேண்டியது முக்கியம்.
ஆட்டோபேமெண்ட் லிமிட் (Autopay Payments Fixed) : நெட்பிளிக்ஸ், எஸ்ஐபி போன்வற்றில் மாதம் மாதம் ஆட்டோபே மூலம் பணம் செலுத்தும்போது, பணம் கட்டும் நேரம் நன்-பீக் ஹவர்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது, காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி பிறகு மட்டுமே பணம் செலுத்த முடியும். இதனால், இந்த நேரங்களுக்குள் மட்டுமே ஆட்டோ டெபிட் மூலம் பணம் செலுத்த முடியும் என்பதைக் கவனிக்க வேண்டும்.
மொபைல் எண் + வங்கிக் கணக்கு (Information on linked accounts) :உங்கள் மொபைல் எண் எந்த வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை இப்போது ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications