சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவும் சேர்ந்தால் அந்த எண்ணிக்கை 6ஆக அதிகரிக்கும்.
இந்தியாவில் தற்போது வந்தே பாரத் ரயில்களின் சேவை வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் கூட பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புதிய வந்தே பாரத் ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு வரை இயக்கப்படும் என தெரிகிறது. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது.
புதிய வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸூக்கு அடுத்தபடியாக இந்த பாதையில் இயக்கப்படக்கூடிய வேகமான ரயிலாக இது இருக்கும்.
தற்போது இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது. ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணத்தை முடிக்கிறது.
எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையிலான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஆறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. மொத்தம் எட்டு பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ் , மீதமுள்ள 7 பெட்டிகள் ஏசி சேர் காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வந்தே பாரத் ரயிலானது சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1. 50 மணியளவில் நாகர்கோயிலை சென்று அடைய உள்ளது. மீண்டும் நாகர்கோவிலில் 2. 20க்கு புறப்படும் இந்த ரயிலானது இரவு 11.15 மணிக்கு சென்னை வந்து அடையும்.
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து மைசூரு, சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர், சென்ட்ரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து திருநெல்வேலி மற்றும் மைசூரிலிருந்து சென்ட்ரல் என 5 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் 6ஆவது எழும்பூர்- நாகர்கோவில் ரயில் சேர உள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications