அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி உலக மக்கள் தொகை 809 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 1 ஆம் பிறக்கும் போது நாட்டு மக்கள் தொகை 8,092,034,511 ஆக இருக்கும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை 7.1 கோடி அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் 7.5 கோடி மக்கள் தொகை அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் லேசாக குறைந்துள்ளது. நீண்ட காலமாக சீனா, ஜப்பான் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையிலும் 2024 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முழுவதும் உலகளவில் ஒவ்வொரு வினாடியும் 4.2 பிறப்புகள் மற்றும் 2.0 இறப்புகள் நிகழும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில், பிறப்பு, இறப்பு மற்றும் சர்வதேச இடம்பெயர்வு ஆகியவற்றின் காரணமாக மக்கள் தொகை ஒவ்வொரு 23.2 வினாடிகளுக்கும் ஒரு நபர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவில் மக்கள் தொகை வளர்ச்சியின் தற்போதைய வேகத்தை காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி இந்தியா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றது. மக்கள் தொகை 141 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து சீனா 140.8 கோடி மக்கள் தொகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 341.1 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.78% ஆகும்.
மக்கள் தொகை குறைந்து வருவகு 2024 ஆம் ஆண்டில் மிகவும் முக்கியமான விவாத பொருளாக இருந்தது. குறிப்பாக ஜப்பான் நாட்டில் இளம் தலைமுறையினர், பிறப்பு விகிதம் ஆகியவை அதிகளவில் குறைந்துள்ளதால் ஜப்பான் நாட்டின் நுகர்வு, உற்பத்தி, முதலீடு என அனைத்தும் குறைந்து வருகிறது.
உதாரணமாக ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான நிசான், ஹோண்டா ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியும், உலகளாவிய வர்த்தகமும் குறைந்துள்ளதால் அதன் வர்த்தகங்களை இணைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இப்படி மக்கள் தொகைக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications