கிரிப்டோகரன்சிகள் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் பணத் தாள்கள் அதிகம் இருக்காது என்று கூறியவர்கள் எல்லோரும், இன்று தற்போது பெரும் மெளனம் காத்து வருகின்றனர்.
ஏனெனில் அந்தளவுக்கு கிரிப்டோகரன்சியானது நடப்பு ஆண்டில் முதலீட்டாளர்களை பாடாய்படுத்தியுள்ளன.
குறிப்பாக தனியார் கிரிப்டோகரன்சிகளில் மிக பிரபலமான, பிட்காயின் மிக மோசமான சரிவினைக் கண்டது. இன்று வரையில் மீளவே இல்லை எனலாம். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சிகள் மீதான நம்பிக்கை என்பதை குறைத்துள்ளது. இது எதிர்காலத்தில் இன்னும் என்னவாகுமோ என்ற அச்சமே இருந்து வருகின்றது. இதற்கிடையில் சக்திகாந்த தாஸின் இந்த அறிக்கை மேற்கொண்டு நம்பிக்கையை குறைக்கலாம்.
நம்பிக்கை சரிவு
இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகள் குறித்தான மோசடிகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சிகள் மீதான நம்பிக்கையும் குறைந்துள்ளது.
இந்திய அரசும் சொந்தமாக டிஜிட்டல் கரன்சியினை அறிமுகம் செய்துள்ளது. இது மேற்கொண்டு இந்திய அரசு கிரிப்டோகரன்சிகளுக்கு முழுமையாக ஆதரவு காட்டவில்லை என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.
அடுத்த நிதி நெருக்கடி
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், அடுத்த நிதி நெருக்கடி என்பது தனியார் கிரிப்டோகரன்சிகளால் வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தாஸ் இன்னும் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை இன்னும் வைத்துள்ளார் எனலாம்.
கிரிப்டோகரன்சிகளுக்கு அடிப்படை மதிப்பு என்பது இல்லை. இது மேக்ரோ பொருளாதாரம், நிதி ஸ்திரத்தன்மைகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
பிரச்சனை ஏற்படுத்தலாம்
பிசினஸ் ஸ்டாண்டர்டு நடத்திய BFSI Insight Summit 2022 மாநாட்டில் பேசிய சக்திகாந்த தாஸ், கிரிப்டோகரன்சிகளுக்கு அடிப்படை மதிப்பு என்பது இல்லை. இது மேக்ரோ பொருளாதாரம், நிதி ஸ்திரத்தன்மைகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் விருப்பம்
தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே ரிசர்வ் வங்கி தடை விதிக்கவே விருப்பம் தெரிவித்து வந்தது. இதற்காக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இது குறித்து மத்திய அரசும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
பல ஆயிரம் கோடிகளில் பரிவர்த்தனை செய்யும் கிரிப்டோ சந்தையை நெறிமுறைப்படுத்த வேண்டும். கிரிப்டோவை அனுமதித்தால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பதம் பார்த்துவிடும் என்றெல்லாம் கருத்துகள் அந்த சமயத்தில் கிளம்பின.
காலத்தின் கட்டாயம்
அதேசமயம் கிரிப்டோகரன்சிகள் காலத்தின் கட்டாயம் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இப்படி ஒரு பக்கம் கிரிப்டோ கரன்சி சந்தை வேகமாக வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் கிரிப்டோகரன்சிகள் தாறுமாறான சரிவினைக் கண்டு வந்தன.
இப்படி அடுத்தடுத்த சம்பவங்களும் கிரிப்டோகரன்சிகள் குறித்தான சமீபத்திய செய்திகள், நிச்சயம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பதம் பார்த்தது எனலாம். மொத்தத்தில் ரிசர்வ் வங்கி சொன்னதெல்லாம் உண்மை தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
தாக்கம் இருக்கலாம்
சமீபத்திய காலமாகவே கிரிப்டோகரன்சிகள் அதனை முதலீட்டாளார்கள் மத்தியில் அதனை உணர்த்த தொடங்கிவிட்டன. சமீப காலமாகவே பெரியளவில் ஏற்றம் காணாத நிலையில், கிரிப்டோகரன்சிகள் மீதான முதலீடுகள் வெளியேறலாம். அதோடு எஃப் டி எக்ஸ் போன்ற சம்பவங்களும் அரங்கேறலாம். இதுவும் கிரிப்டோகரன்சி சந்தையில் மட்டும் அல்ல, நிதி சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கலாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications