ஜனவரி 3ஆம் தேதி அன்று அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு பிரிவினர் வெனிசுலா தலைநகர் கராகஸில் நுழைந்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவருடைய மனைவியையும் சிறை பிடித்து நாடு கடத்தினர்.
ஊழல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் அமெரிக்காவால் கைது செய்யப்படுவோம் என்பது முன்கூட்டியே மதுரோ அறிந்திருந்தாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர் மிகவும் ஸ்மார்ட்டான முறையில் தன்னுடைய சொத்துக்களை பிட்காயின்களாக மாற்றியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தி ஃபார்ச்சூன் இதழ் நிக்கோலஸ் மதுரோ 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை Shadow Reserve எனப்படும் நிழல் சொத்தாக வைத்திருக்கிறார் என செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா அரசாங்கம் வெனிசுலா நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்திருந்தது. இந்த பொருளாதார தடைகளில் இருந்து தப்பிப்பதற்கு பிட்காயின்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார் மதுரோ என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரோ வசம் 6 லட்சம் பிட்காய்கள் இருப்பதாகவும் இதன் மதிப்பு 56 முதல் 60 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்கியது. இந்த பொருளாதார தடைகளில் இருந்து மீண்டு வருவதற்கு வெனிசுலா அரசாங்கம் கிரிப்டோ கரன்சிகளை தான் ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியது.
அமெரிக்காவின் பொருளாதார தடையால் வெளிநாடுகளில் இருந்து சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகளின் எந்த நாணயங்களையும் பயன்படுத்தி தங்கள் வசம் இருக்கும் கச்சா எண்ணெயை விற்க முடியவில்லை, எந்த நாடுகள் உடனும் வணிகம் செய்ய முடியவில்லை. எனவே மதுரோ தலைமையிலான அரசு கிரிப்டோ நாணயங்கள் மூலம் வர்த்தகம் செய்துள்ளது என்கிறது ஃபார்ச்சூன் செய்தி. 2020களில் மத்தியில் உலக அளவில் அதிக அளவில் கிரிப்டோ கரன்சி பயன்படுத்தக்கூடிய நாடுகளில் வெனிசுலா முன்னிலை இடத்தை வகித்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் வெனிசுலா அரசே 2018 ஆம் ஆண்டு பெட்ரோ என்ற டிஜிட்டல் டோக்கனை அறிமுகம் செய்தது. இது அந்நாட்டின் எண்ணெய் வளங்களை விற்பனை செய்து வருவாய் பார்ப்பதற்கான ஒரு டிஜிட்டல் டோக்கனாக பயன்படுத்தப்பட்டது. அதாவது டாலரில் இல்லாமல் கிரிப்டோவில் வர்த்தகம் செய்துள்ளனர். ஓவர்சீஸ் நெட்வொர்க் மூலம் டோக்கன்களை கிரிப்டோ நாணயங்களாக மாற்றி சேமித்துள்ளனர்.
அதே போல நாட்டில் இருந்த தங்கத்தையும் விற்பனை செய்துள்ளனர். இவற்றில் இருந்து கிடைத்த வ்ருமானத்தை பிட்காயினில் மதுரோ முதலீடு செய்துள்ளார்.அமைச்சர்கள் இதற்கு உடந்தையாக இருந்தனர் என சொல்லப்படுகிறது. பொருளாதார தடைகளை எதிர்கொள்ள இந்த செயலில் மதுரோ இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமெரிக்க அரசாங்கம் மதுரோவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது . இதற்கிடையே ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி மதுரோ ஆட்சியில் வெனிசுலா நாட்டின் மத்திய வங்கியில் இருந்து 113 மெட்ரிக் டன்கள் தங்கம் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. 2013 ஆம் ஆண்டு மதுரோ அதிபர் பதவி ஏற்றது தொடங்கி, 2016 ஆம் ஆண்டு வரை இந்த தங்கம் சுவிட்சர்லாந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூலம் இவை மாற்றப்பட்டு வெவ்வேறு நாடுகளுக்கு விற்று பணமாக்கப்பட்டதாம். இந்த பணத்தை கொண்டு 2018ஆம் ஆண்டில் பிட்காயின்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கியுள்ளனர். பிட்காயின்கள் எந்த நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது என்பதால் இந்த வழிமுறையை பின்பற்றியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மதுரோ இவ்வளவு பிட்காயின்கள் வைத்திருப்பதற்கான பிளாக் செயின் ஆதாரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதே வேளையில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கு முந்தைய நாளே மதுரோ தங்கம் உள்ளிட்டவற்றை ரஷ்யாவுக்கு அனுப்பியதாக ஒரு தகவல் பரவுகிறது. ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications