இரவில் ரயில் பயணம் செய்யும் நபரா நீங்கள்? இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க..! மாட்டுனா ஜெயில் தான்!

நாம் அனைவரும் சில சமயங்களில் ரயிலில் பயணம் செய்திருப்போம். ஆனால் அவ்வாறு செய்யும்போது சில விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். ரயில்வே விதிமுறைகளை மீறுவது, கவனக்குறைவாக ரயிலில் நடந்து கொள்வது அபராதத்துக்குரிய செயலாக கருதப்படுகிறது. இந்த விதிகளை மீறினால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை கூட விதிக்கப்படலாம். பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத பயணத்திற்கு நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விதிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

வெடிப்பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது: ரயில்களில் பயணம் செய்யும்போது வெடிப்பொருட்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இது ரயில்வே விதிமுறைகளை மீறும் செயலாகும்.

 இரவில் ரயில் பயணம் செய்யும் நபரா நீங்கள்? இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க..! மாட்டுனா ஜெயில் தான்!

நீங்கள் பட்டாசு, மண்ணெண்ணெய். பெட்ரோல் அல்லது கேஸ் சிலிண்டர்கள் போன்ற பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164-இன் கீழ் இதற்கு ரூ.1000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இரவில் தொந்தரவு செய்யாதீர்கள்: பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் ஓய்வெடுப்பதை உறுதிசெய்ய, TTE-கள் இரவில் டிக்கெட்டுகளை சரிபார்ப்பதில்லை. பயணிகளும் இதேபோல மற்றவர்களின் தூக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இரவில் சத்தமாகப் பேசுவது, மொபைலை ஹெட் செட் போடாமல் பயன்படுத்துவது, மியூசிக் வாசிப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்: ரயில் அல்லது ரயில் நிலையங்களில் புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. TTE இதுபோன்ற நபர்களைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பயணிகளின் பயணத்தின் போது புகைபிடிப்பதையோ அல்லது மது அருந்துவதையோ தவிர்க்குமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

டிக்கெட் இல்லாமல் பயணிப்பது: டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இரவுப் பயணத்தின் போது பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து நீங்கள் பிடிபட்டால், TTE உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் மற்றும் உங்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

அவசரச் சங்கிலி: இந்திய ரயில்வே சட்டம் 141-வது பிரிவின்படி, சரியான காரணமின்றி அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினால் ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+