பெங்களூர்-ஐ கலக்கும் காமத் பிரதர்ஸ்.. தொட்டது துலங்கும் ராசிகாரர்கள்..!

37 வயதான நிகில் காமத் ஜிரோதாவின் இணை நிறுவனர் ஆவர். அவர் இந்தியாவின் இளம் பில்லியனர் என போர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது.

நிகில் காமத்தின் நிகர சொத்து மதிப்பு 3.1 பில்லியன் டாலர்கள் ஆகும். அவரது மூத்த சகோதரர் நிதின் காமத்தின் நிகர சொத்து மதிப்பு 4.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

பெங்களூர்-ஐ கலக்கும் காமத் பிரதர்ஸ்.. தொட்டது துலங்கும் ராசிகாரர்கள்..!

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட நிகில் காமத் ஒரு கால் சென்டரில் தனது முதல் வேலையைச் செய்தார். பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். பின்னர் காமத் சகோதரர்கள் இணைந்து ஜிரோதாவை 2010 ஆம் ஆண்டில் தொடங்கினர். அதன் பின்னர் அவர்களது ஆட்டம் வேறு லெவலில் இருந்தது.

இது பற்றி அவர்கள் கூறுகையில், நேரம்தான் எல்லாவற்றுக்கும் காரணமாகும். மக்கள் பெரும்பாலும் காலத்தின் முக்தியத்துவத்தை அறியத் தவறி விடுகின்றனர். நான் ஒரு அதிர்ஷ்டசாலிதான். சரியான நேரத்தில் சரியான இடத்தில் சிறந்த சக ஊழியர்களுடன் எனது பயணம் தொடர்ந்தது.

இது பற்றி நிகில் காமத் கூறுகையில் நான் எனது தொழில் பயணத்தை ஒரு கால் சென்டரில் தொடங்கினேன். பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டேன். ஒரு வியாபாரியாக நான் எனது வர்த்தகத்தை லாபகரமாகவும் பங்குச்சந்தையின் பலத்தையும் முழுவதுமாக உணர்ந்து கொண்டேன் என்றார்.

நிகில் காமத் ட்ரூ பீகான் என்ற நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். அது ஒரு முதலீட்டு நிர்வாக நிறுவனம். அதிக செல்வமுள்ள நபர்களுக்கு சேவை அளிக்கும் நிறுவனமாகும்.

கடந்த ஓராண்டாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியால், ஃபோர்ப்ஸின் 2024-ம் ஆண்டுக்கான உலக பில்லியனர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 169 ஆக இருந்தது. அவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர்களை நெருங்கி வருகிறது, மொத்தமாக $954 பில்லியன். கடந்த ஆண்டு $675 பில்லியனில் இருந்து 41% அதிகரித்து, 2022 இன் மொத்த $750 பில்லியனைத் தாண்டியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பங்குகள் வளர்ந்து வருவதால், முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு $83 பில்லியனில் இருந்து $116 பில்லியனாக உயர்ந்தது, உலகின் பில்லியனர்கள் பட்டியலில் பிரத்யேக $100 பில்லியன் கிளப்பில் நுழைந்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.

அம்பானி உலகின் ஒன்பதாவது பணக்காரராக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இந்தியா மற்றும் ஆசியாவின் பணக்காரர் ஆகிய இரண்டிலும் தொடர்கிறார். இந்த ஆண்டு இந்திய பில்லியனர்களில் மிகப்பெரிய டாலர் லாபம் ஈட்டியது உள்கட்டமைப்பு மற்றும் பொருட்களின் அதிபர் கெளதம் அதானியின் குரூப் ஆகும். அவர் இந்தியாவின் இரண்டாவது பணக்கார குடிமகனாக $36.8 பில்லியன் சேர்த்தார்.

புதிய பில்லியனர்கள்: ஒட்டுமொத்தமாக, பட்டியலில் உள்ள இந்திய பில்லியனர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்களின் சொத்து கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இருபத்தைந்து புதிய இந்திய பில்லியனர்கள் அறிமுகமானார்கள்.

அவர்களில் நரேஷ் ட்ரெஹான், ஒரு முன்னணி இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவர் மருத்துவமனைகளின் மெடாண்டா சங்கிலியை சொந்தமாக வைத்து நடத்துகிறார். கெய்ன்ஸ் டெக்னாலஜியின் நிறுவனர் ரமேஷ் குன்ஹிகண்ணன். பைஜு ரவீந்திரன் உட்பட, கடந்த ஆண்டு பட்டியலில் இருந்து நான்கு பேர் மட்டுமே இந்த முறை வெளியேறினர்.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+