டெல்லி: பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கம் என்பது சகஜமான ஒன்றாக இருந்தாலும், இது கொரோனா மத்தியில் ஏற்கனவே பெரிய இழப்பினை சந்திதுள்ளது சந்தை. இது கடந்த வாரத்தில் டாப் 10 சந்தை மதிப்புள்ள நிறுவனங்களில், 9 நிறுவனங்கள் 1,63,510.28 கோடி ரூபாயினை இழந்துள்ளன.
குறிப்பாக இது கடந்த வாரத்தில் 2.63 சதவீதம் வீழ்ச்சி கண்டு, மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1,071.43 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதில் கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பு 32,570.94 கோடி ரூபாய் அதிகரித்து, 3,06,331.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மீதமுள்ள 9 நிறுவனங்கள் பெரும் இழப்பினை சந்தித்துள்ளன.
ரிலையன்ஸ் (RIL) தான் டாப் லூசர்
இதில் டாப் 10 லிஸ்டில் உள்ள, அதிக சந்தை மதிப்பினைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 39,355.06 கோடி ரூபாயினை இழந்து, 13,89,159.20 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கு அடுத்தாற்போல், தனியார் துறையினை சேர்ந்த மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் சந்தை மதிப்பில் 28,574.61 கோடி ரூபாயினை இழந்து, 6,51,518.11 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் & ஹெச்டிஎஃப்சி
இதே மற்றொரு ஜாம்பவான் ஆன இன்ஃபோசிஸ் நிறுவனம் 26,152.79 கோடி ரூபாய் சந்தை மதிப்பு குறைந்து, 4,51,753.23 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சியின் சந்தை மதிப்பானது 28,844.93 கோடி ரூபாய் குறைந்து 3,45,287.89 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச்யுஎல் & ஐசிஐசிஐ வங்கி
இதுவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 16,858.07 கோடி ரூபாய் குறைந்து, 4,86,898.54 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே மற்றொரு தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 16,754.64 கோடி ரூபாய் குறைந்து, 2,70,736.06 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
டிசிஎஸ் & ஹெச்சிஎல்
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 8,105.15 கோடி ரூபாய் குறைந்து, 9,99,954.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே ஹெச்சிஎல் டெக்னாலஜியின் சந்தை மதிப்பானது 2,455.87 கோடி ரூபாய் குறைந்து, 2,28,816.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பில் 409.16 கோடி ரூபாயினை இழந்து, 2,36,552.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.