90கிட்ஸ் அனைவருக்கும் நினைவில் இருக்கும் விளம்பரங்களில் வாஷிங் பவுடர் நிர்மா, இந்த நிறுவனம் வெறும் சலவை பவுடர் வர்த்தகத்தில் இருந்து பல துறையில் இறங்கி தற்போது 12000 கோடி நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் வர்த்தகத்தை பல்வகைப்படுத்த வேண்டும் என்பதற்காக வாஷிங் பவுடர் நிர்மா-வை நிர்வாகம் செய்ய நிர்மா குரூப் ஹோட்டல் துறையில் இறங்க உள்ளது.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு வர்த்தகத்தை செய்யும் நிர்மா குழுமம், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஹோட்டல் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இந்த மாபெரும் நிறுவனம் தற்போது சோப்பு, சோடா ஆஷ், காஸ்டிக் சோடா, சிமெண்ட், சுகாதார சேவை போன்ற துறைகளில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் புதிதாக உயர்தர ஐந்து நட்சத்திர ஹோட்டலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இந்த ஹோட்டல் ஆடம்பர சந்தையை இலக்காகக் கொண்டு துவங்கப்பட உள்ளது.
நிர்மா குழுமம் திட்டமிட்டுள்ள இந்த ஆடம்பர 5 ஸ்டார் ஹோட்டலில் 555 அறைகள் இருக்கும். இது அகமதாபாத்தின் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் அமைக்கப்படுவதாக தெரிகிறது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகு, கட்டுமானப் பணிகள் தொடங்கும். இத்தகைய பெரிய அளவிலான ஹோட்டல், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
இந்த ஹோட்டலை நேரடியாக இயக்குவதற்கு நிர்மா குழுமம் விரும்பவில்லை, இதனால் பல்வேறு சர்வதேச ஹோட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் முக்கியமாக இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (ஐஎச்சிஎல்), ஹையாட் ஹோட்டல்ஸ், மாரியட் இன்டர்நேஷனல் போன்ற பெரு நிறுவனங்கள் அடங்கும்.
இத்தகைய பெரிய பிராண்டுகள் இந்த ஹோட்டலை இயக்குவதன் மூலம் அதன் தரத்தை எளிதாக உயர்த்த முடியும் என்பது நிர்மா குழுமத்தின் நம்பிக்கை. இதேபோல் இத்துறை வர்த்தகத்திற்கு புதியது என்பதால் பெரிய பிராண்டின் கூட்டணி கட்டாயம் பலன் அளிக்கும். உலகளாவிய அனுபவத்தை இந்த ஹோட்டலுக்கு கொண்டு வர முடியும்.
இந்த ஹோட்டல் 2030 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு முன்பு இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications