டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இதில், மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் குறித்து கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.15,000 கோடி கடன் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிதியைப் பயன்படுத்தி நீண்ட காலத்துக்கான கட்டமைப்புத் திட்டங்களில் மாநிலங்கள் முதலீடு செய்ய முடியும்.

அதேபோல கடந்த 2023-2024ம் ஆண்டு ரூ.1,00,000 கோடி கடன் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சசர் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்தக் கடனை 50 ஆண்டுகளில் மாநிலங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அத்தொகைக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொகை ரூ.1.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த தொகையில் மொத்தமும் விடுவிக்கப்படாது. பெரும்பாலான தொகை விடுவிக்கப்பட்டாலும், மீதமுள்ள தொகையை மாநில அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் விடுவிக்கப்படும். பழைய அரசு வாகனங்களை ஒழித்துக்கட்டுவது, நகர்ப்புற திட்டமிட்டல், சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதி சீர்திருத்தங்களை உருவாக்குதல் போன்றவை மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டால் மீதமுள்ள நிதியும் விடுவிக்கப்படும்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொகையில், சுமார் 75 சதவிகிதம் வரை (ரூ.81,195.35 கோடி) 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை விடுவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதிலும் சில சிக்கல்கள் இருப்பதாக எதிர்கட்சிகள் கூறியுள்ளன. அதாவது, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக அளவு கடன் கொடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
இந்த விமர்சனங்களை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனில் உத்தரப் பிரதேசம்தான் (ரூ.12,458.43 கோடி) அதிக அளவு நிதியை பெற்றிருக்கிறது. மறுபுறம் மத்திய அரசின் சீர்திருத்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி கேரளா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடன் பெற தகுதி இல்லை என மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இப்படி இருக்கையில் இந்த ஆண்டு வட்டியில்லா கடன் ரூ.1.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த முறையாவது கேரளா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடன் வழங்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications