டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கக்கூடிய 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் புத்தாண்டு பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த கமிஷன் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க உள்ளது. எனவே சம்பள கமிஷன் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசு ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

தற்போது நடைமுறையில் இருக்கும் 7ஆவது சம்பள கமிஷனின் காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதால் 8ஆவது சம்பள கமிஷன் வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த கால நிகழ்வுகளை ஆய்வு செய்யும் போது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
தற்போது தான் அரசு சம்பள கமிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இன்னும் சம்பள கமிஷனுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. பொதுவாக சம்பள கமிஷன் தங்கள் அறிக்கைகளை இறுதி செய்வதற்கு ஒரு வருடத்திற்கு மேலாக எடுத்துக் கொள்ளும். எனவே அடுத்த ஜனவரி மாதம் இந்த பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
இதனிடையே நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சஜ்தா அகமது ஆகியோர் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது சம்பள கமிஷன் குறித்து சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். குறிப்பாக மத்திய அரசு எட்டாவது சம்பள கமிஷன் அறிக்கையை சமர்ப்பணம் செய்வதற்கு ஏதேனும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்திருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மற்றும் பரிந்துரை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என பதில் அளித்தார். மேலும் 8ஆவது சம்பள கமிஷனில் இடம்பெற்றிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேள்விக்கு பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன் தோராயமாக 1.03.2025 நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 36.57 லட்சம் என்றும் 31.12.2024 நிலவரப்படி ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 33.91 லட்சம் என்றும் தெரிவித்தார்.
8ஆவது சம்பள கமிஷனால் ஏற்படும் நிதி தாக்கங்கள் குறித்து அரசு ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டதா அல்லது ஊழியர் சங்கங்களோடு ஆலோசனை நடத்தியதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சகம் , உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் குறிப்பு விதிமுறைகள் குறித்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
எட்டாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் மற்றும் அவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதை பொறுத்து மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியவரும் என்றும் அவர் விளக்கம் தந்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications