டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நேற்று உற்பத்தி துறையை மேம்படுத்தும் நோக்கில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வந்துள்ளது.
இதன் மூலம் சுயசார்பு இந்தியாவை உறுதிபடுத்த முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் உற்பத்தி விகிதம் அதிகரிக்கும். தொழில்துறையும் மேம்படும். இதன் மூலம் ஏற்றுமதியினையும் அதிகரிக்க முடியும். ஆக நாம் இறக்குமதியினை மட்டும் நம்பாமல், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியினை இதன் மூலம் அதிகரிக்க முடியும். ஆக மொத்தத்தில் இந்தியா யாரையும் நம்பாமல் தனித்து செய்பட முடியும். இது இந்தியாவினை சுயசார்பு இந்தியாவாக மாற்ற வழிவகுக்கும். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டது.
அந்த வகையில் இன்று துறை வாரியாக எந்த துறைக்கு எவ்வளவு செலவிடப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். குறிப்பாக Advance cell chemistry batteryக்கு 18,100 கோடி ரூபாய் செலவிடப்படலாம் என்றும், இதே எலக்ட்ரானிக் / டெக்னாலஜி பொருட்கள் துறைக்கு 5,000 கோடி ரூபாயும், இதே ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைக்கு 57,042 கோடி ரூபாய் செலவிடப்படலாம் என்று மதிப்பிடப்படுள்ளது.
இதே மருந்து துறைக்கு 15,000 கோடி ரூபாயும், தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்கிங் துறைக்கு 12,195 கோடி ரூபாய், டெக்ஸ்டைல்ஸ் துரைக்கு 10,683 கோடி ரூபாயும், உணவு பொருட்கள் துறைக்கு 10,900 கோடி ரூபாயும், சோலார் வாகனங்களுக்கு 4,500 கோடி ரூபாயும், ஒயிட் கூட்ஸ் 6,238 கோடி ரூபாயும், ஸ்டீல் துறைக்கு 6,322 கோடி ரூபாயும் செலவிடப்படலாம் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆக மேற்கண்ட முக்கிய துறைகளுக்கு மொத்தம் 1,45,980 கோடி ரூபாய் ஊக்க நிதியினை செலவிடப்பட உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் நெருக்கடியில் உள்ள மேற்கண்ட துறை சார்ந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில், அரசு இந்த திட்டத்தினை அறிவித்துள்ளது. இது இனி வரும் காலாண்டுகளில் இத்துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.