டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில், பல்வேறு அறிவுப்புகளையும், ஏற்கனவே அறிவித்த அறிவிப்புகளை பற்றியும் கூறினார்.
இரண்டாம் கட்ட ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகளை பற்றி அறிவித்துள்ள நிலையில், நடப்பு காலாண்டில் நிச்சயம் பொருளாதாரம் மீண்டு வரும் என ஆர்பிஐ-யின் மதிப்பீட்டினையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் அழுத்தத்தில் உள்ள துறைகளை பற்றியும் சுட்டி காட்டியுள்ளார்.
காமத் கமிட்டியால் அழுத்தத்தில் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் முதலில் உள்ள துறை ஆட்டோ உதிரி பாகங்கள் தான். இதனையடுத்து ஆட்டோ டீலர்ஷிப், ஆட்டோமொபைல் உற்பத்தி, விமான துறை, கட்டுமான பொருட்கள், சிமெண்ட், கெமிக்கல்ஸ், கட்டுமானம், நுகர்வோர் பொருட்கள்,
எஃப்எம்சிஜி, கார்ப்பரேட் ரீடெயில் அவுட்லெட், ஜெம் & ஜூவல்லரி, ஹோட்டல், உணவகங்கள், சுற்றுலா துறை, அயர்ன் & ஸ்டீல் உற்பத்தி. லாகிஸ்டிக்ஸ். சுரங்கம், மருந்து உற்பத்தி, பிளாஸ்டிக் உற்பத்தி, கப்பல் & கப்பர் சேவை, மின்சார உற்பத்தி, டிரான்ஸ்மிஷன், மின்சாரம் வழங்குதல், வீடுகள் மற்றும் வர்த்தகம் (ரியல் எஸ்டேட்), சர்க்கரை, டெக்ஸ்டைல்ஸ், ஏற்றுமதி உள்ளிட்ட பல துறைகளையும் காமத் அடையாளம் கண்டுள்ளது.
கொரோனாவின் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள இந்த துறைகளுக்கு அரசு சலுகைகளை அளிக்கும் என்பது குறித்த அறிவிப்புக்கள் வெளியாக வில்லை. எனினும் புதன் கிழமையன்று அறிவித்த ஊக்குவிப்பு சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில் இந்த துறைகள் விரைவில் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில் இந்த நெருக்கடியான காலகட்டதிலும் கூட, தொழில்துறை சம்பந்தமான குறியீடுகள் நல்ல வளர்ச்சியினை சுட்டிக் காட்டியுள்ளன. ஆக இது பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கான அறிகுறிகளே. அதோடு அரசு நேற்று அறிவித்த ஊக்கத் தொகைகள் சரியான நேரத்தில் கிடைக்கும் பட்சத்தில் மேற்கண்ட துறைகள் மீண்டும் வளர்ச்சிக்கு பாதைக்கு திரும்பலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உண்மையில் நெருக்கடியான நேரத்தில் கூட நல்ல வளர்ச்சியினை கண்ட நிறுவனங்கள், அதிலும் இந்த விழாக்கால பருவத்தில் தேவை அதிகரிக்கலாம். அதோடு அரசின் அறிவிப்பும் மேற்கொண்டு ஊக்குவிப்பினை அளிக்கும் என்பதால், விரைவில் மீண்டு வரலாம் என்று நம்பப்படுகிறது.