டெல்லி: கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் இன்னும் பெரும்பான்மையோர் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையே நீடித்து வருகிறது.
மக்கள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கென சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
இது சமானியர்களுக்கு உதவும் வகையில், EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை அரசே செலுத்தும் என்றும் கூறியுள்ளார்.
பிஎஃப் தொகை
கடந்த முறை பொருளாதார ஊக்குவிப்பு சலுகையை அறிவித்த நிர்மலா சீதாராமன், EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை ஊழியர் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே செலுத்துவிடுவதாக அறிவித்தார். மேலும் அப்போது ஊழியர் நிறுவனம் என இரு தரப்பின் சார்பிலும் தலா 12 சதவிகிதத்தை அரசே செலுத்திவிடும் என்றும் அப்போது அறிவித்தார். .
அரசே செலுத்திவிடும்
இந்த நிலையில் தற்போது 20 லட்சம் கோடிக்கான சலுகையை அறிவித்து வரும் நிலையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் மூன்று மாதங்களுக்கும் பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும். இந்த பிஎஃப் தொகையை அரசே செலுத்துவதால் நிறுவனம், ஊழியர்களுக்கு 6,500 கோடி ரூபாய் மிச்சமாகும்.
ஊழியர்களுக்கு பயன் தான்
ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தியது. இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்காக தொகையை அரசே செலுத்தி விடும் என்றும் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே ஊழியர்களின் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே அடுத்த மூன்று மாதங்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதி பணத்தை செலுத்திவிடும், இது ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கு ம் பயனுள்ளதாக அமையும்.
அறிவிப்பு
கொரோனா பாதிப்பில் நாடு சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், அதனை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று கூறியிருந்த நிலையில் தற்போது அது குறித்து நிதியமைச்சர் பவ்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறார்.
ஆனால் ஒரு கண்டிசன்
இந்த சலுகை அதிகபட்சமாக 100 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. அப்படி பணியாற்றும் ஊழியர்களில் 90 சதவீத ஊழியர்களின் மாத ஊதியம் ரூ .15,000 க்கும் குறைவாக இருப்பது அவசியம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications