மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டு வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் மத்தியிலான போர் தற்போது உலக நாடுகளையும் பயமுறுத்த துவங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் ஜி20 தலைமை பதவி குறித்து மராகேச், மொராக்கோ-வில் பேசும் போது முக்கியமான விஷயத்தை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பிரச்சனை உலக நாடுகளுக்கு மீண்டும் எரிபொருள் விலை குறித்த அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என பேசினார். இக்கூட்டத்தில் பல நாடுகள் இதே பிரச்சனையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான பிரச்சனை துவங்கிய நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யா, சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தது மூலம் இதன் விலை அதிகரித்து வந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 4.78 டாலர் உயர்ந்து 87.69 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.89 டாலர் உயர்ந்து 90.57 டாலராகவும் உயர்ந்துள்ளது. பல மாதங்களுக்கு பின்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 90 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது என்றால் மிகையில்லை.
இந்த திடீர் உயர்வுக்கு முக்கியமான காரணம் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போரில் ஈரான் மற்றும் லெபனான் தலையிடும் என்ற கருத்து நிலவுவது தான். ஆனால் இதற்கு ஈரான் பாதுகாப்பு செயலாளர் காசா பகுதியில் இஸ்ரேல் நாட்டின் செயல்பாடுகள் குறித்து முடிவு புதிய அணி உருவாகும் வாய்ப்பு குறித்து பேசப்படும் என தெரிவித்தார்.

ஐஎம்எப் - உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் 2023 இல் கலந்து கொண்ட மத்திய நிர்மலா சீதாராமன் பேசுகையில் எரிபொருள் விலை மீதான அழுத்தம் உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்க பாதிப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இதேபோல் சப்ளை செயின் கடுமையாக பாதிக்கும் எனவும் பேசினார்.
இந்த நிலையிலும் வளரும் நாடுகள் தான் சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீட்டை நிலை நிறுத்தும் முக்கிய காரணியாக உள்ளது எனவும் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலர் அளவீட்டை தொட்டு இருக்கும் வேளையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சமும் இதனுடன் தொத்திக்கொண்டு உள்ளது.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வரிசை கட்டி நிற்கும் மக்கள்..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!



Click it and Unblock the Notifications