ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் சென்டர் ஆஃப் அட்டிராக்ஷனாக இருந்தார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 6 மாதமாக தினமும் 16 மணிநேரம் பணியாற்றுவதாக ஆனந்த் அம்பானி 3 நாள் விழாவில் அனைத்து விருந்தினர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நீதா அம்பானியின் விஷ்வம்பரி ஸ்துதி நடன வீடியோ தற்போது இணையத்தில் பதிவிடப்பட்டு பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வீடியோவில், நீதா அம்பானி உளமார ஈடுபட்டு ஆடியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் வாழ்க்கைப் பயணத்திற்குத் தெய்வீக ஆசீர்வாதங்களை வேண்டி நடனமாடினார். நீதா அம்பானி இளம் வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர்.

இந்த நிகழ்ச்சிக்கு இசை அமைப்பாளர்கள் அஜய்-அதுல் இசையமைக்க, ஸ்ரேயா கோஷல் பாடினர். இதற்கு நீதா அம்பானி நடனமாடினார். நீதா அம்பானியின் நடனத்திற்கு கோரியோகிராப் செய்தது, நடன அமைப்பாளர் வைபவி மெர்ச்சண்ட்.
நீதா அம்பானியின் உடை மனிஷ் மல்ஹோத்ராவால் வடிவமைக்கப்பட்டது, மற்ற நடனக் கலைஞர்கள் ஆஷ்லி ரெபெல்லோ வடிவமைத்த உடைகளில் இருந்தனர்.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்களின் மூன்றாவது மற்றும் இறுதி நாளில், "ஹஸ்தக்ஷர்" விழாவில் ராதிகா மெர்ச்சண்ட் அற்புதமான நடனம் ஆடினார், அப்போது அவர் அம்பானி குடும்பத்தில் வரவேற்கப்பட்டார்.
ராதிகா மெர்ச்சன்ட் பாட்டு பாடி, டான்ஸ் ஆடி ஆனந்த் அம்பானி கரம் பிடித்த வீடியோ இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்தது
திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிகழ்வில் "மகா ஆர்த்தி" என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது, அதைத் தொடர்ந்து விருந்து நடைபெற்றது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications