மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீதா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
பாரிஸில் நடைபெறக்கூடிய உலகளாவிய ஒலிம்பிக் அமைப்பின் 142 வது அமர்வில் இந்தியாவிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக ஒரு மனதாக நீதா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது முறையாக இவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தனிநபர் உறுப்பினராக அவர் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் அவருக்கு ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள நீதா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் அமைப்பில் இணைந்த முதல் இந்திய பெண் என்ற முறையில் நீதா அம்பானி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை மும்பையில் நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது தனிப்பட்ட முறையில் தனக்கு பெருமைப்படக்கூடிய விஷயமாக இருந்தாலும், சர்வதேச விளையாட்டு துறையில் இந்தியாவின் தாக்கம் வளர்ந்து வருகிறது என்பதை இது காட்டுகிறது என நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் உலகெங்கிலும் ஒலிம்பிக்கை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம் என அவர் கூறியுள்ளார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி அறக்கட்டளை சார்பாக பல்வேறு விளையாட்டு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் கிட்டதட்ட 22.9 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறார.
மேலும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளையானது பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய இல்லம் என்ற ஒன்றை திறக்க இருக்கிறது. அதாவது இந்திய வீரர்கள் தங்களுடைய வெற்றி கொண்டாட்டங்களையும் தங்களுடைய ஒலிம்பிக் பயணம் குறித்தும் இங்கே பகிர்ந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நாளை(ஜூலை 26) பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications