டெல்லி : நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நெடுஞ்சாலை துறையை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அதிலும் மோட்டார் வாகன சட்ட திருத்தம், பாஸ்டேக் என தொடர்ந்து பல புதிய மாற்றங்களை நெடுஞ்சாலைத் துறையில் அரசு சீரமைத்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு செலவுகள் குறைந்து வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் மத்திய அமைச்சர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்த அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தரைவழிப் போக்குவரத்து துறை மற்றும் கப்பல் துறையிலும் இணைந்து 17 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறைக்கு வந்துள்ள பாஸ்டேக் முறையில் கட்டணம் நடைமுறைக்கு வந்த நிலையில், டோல்கேட்டுகளின் வருமானம் கணிசமான அளவு உயரும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
மேலும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 22 பசுமை அதிவேக சாலைகள் உட்பட உலகத் தரம் வாய்ந்த சாலைகளை வழங்க நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் 15 லட்சம் கோடி ரூபாயை உட்செலுத்துவதைக் காணலாம் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.
தற்போது டோல்கேட்களின் மூலம் தினசரி 25 கோடி ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதே ஆண்டுக்கு 8,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டிசம்பர் இரண்டாவது வாரம் வரை 10 மில்லியன் பாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள 523 டோல்பிளாசாக்களில் தொந்தரவு இல்லாத இயக்கத்தை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாக்குவதற்கு அரசாங்கம் வகுத்த பஸ்டேக் சிஸ்டம் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அடுத்த 2020ம் ஆண்டில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகியவற்றுக்கான அனைத்து தடங்களையும் இணைப்பதற்காக 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications