இந்தியா ஆட்டோமொபைல் துறை வேகமாக மாறி வரும் வேளையில் டீசல் கார்களை தயாரிப்பதை நிறுவனங்கள் குறைத்து வருவது போலவே விரைவில் பெட்ரோல் கார்கள் தயாரிப்பையும் நிறுத்த உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே பெரிய அளவில் டிராண்டாகியிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களும், ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் எரிபொருளில் இயங்கும் கார்களை தயாரிப்பது தான்.
ஒரு லிட்டர் பெட்ரோலை விடவும் எத்தனால் எரிபொருள் மிகவும் குறைவு, இதைவிட முக்கியமாக இதை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்பதால் எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முதல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதல் தீவிரமாக உள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை ஆகஸ்ட் 29, செவ்வாய்க்கிழமை 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது ஏன் முக்கியம் என்றால் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 முதல் 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வேளையில் ஒரு லிட்டர் எத்தனால் எரிபொருள் விலை 45 ரூபாய் முதல் 69 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தரத்திற்கு ஏற்றார்போல் விலை மாறுபடுகிறது, எத்தனால் மூலம் இயங்கும் கார்களை மக்கள் அதிகம் பயன்படுத்தினால் மத்திய அரசு கச்சா எண்ணெய்-க்கு ஒவ்வொரு மாதமும் செலவிடப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில வருடங்களாக மாற்று எரிபொருள் மற்றும் பசுமை எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வலியுறுத்தி வரும் வேளையில் கடந்த ஆண்டு ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் டோயோட்டா Mirai EV கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 2004 ஆம் ஆண்டு முதல் மாற்று எரிபொருளில் இயங்கும் கார்கள் குறித்து பேசி வருவதாகவும், இதற்காக தான் பிரேசில் சென்று புதிய தொழில்நுட்பம் குறித்து அறிந்துக்கொண்டதாக தெரிவித்தார்.
இந்தியாவின் எரிபொருள் தேவையை உள்நாட்டு ஆதாரங்களை வைத்து தீர்க்கப்படுமாயின் கச்சா எண்ணெய் இறக்குமதியை மொத்தமாக நிறுத்தப்பட்டு 16 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும், மேலும் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை குறைக்க முடியும் என தெரிவித்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications