மத்திய அரசு வேலைக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, குறிப்பாக 10ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர்களுக்கு, இந்திய அஞ்சல் துறை (India Post) ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தியை கொண்டு வர உள்ளது.
இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள 30,000-க்கும் அதிகமான கிராம அஞ்சல் ஊழியர் (Gramin Dak Sevak - GDS) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது. இந்தப் பணிக்கான முக்கியமான சிறப்பு என்னவென்றால், இந்த பணியில் சேர எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது.

10ஆம் வகுப்பு மதிப்பெண்களே அடிப்படை
இந்த GDS பணிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி தேர்வு போன்ற எந்தவிதமான பரீட்சைகளுக்கும் செல்லத் தேவையில்லை. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit List) மட்டுமே தேர்வு நடைபெறும்.
அதாவது, 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனால், தேர்வு அச்சம் இல்லாமல் அரசு வேலை பெறும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
எந்தெந்த பதவிகள் நிரப்பப்பட உள்ளன?
இந்த அறிவிப்பின் மூலம், இந்திய அஞ்சல் துறை கீழ்கண்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை மேற்கொள்ள உள்ளது:
கிளை அஞ்சல் அதிகாரி (Branch Post Master - BPM)
உதவி கிளை அஞ்சல் அதிகாரி (Assistant Branch Post Master - ABPM)
தபால் சேவகர் (Dak Sevak)
இந்த பணிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் அஞ்சல் சேவையை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை.
சம்பளம் எவ்வளவு?
பதவி மற்றும் பணிப்படி (TRCA slab) அடிப்படையில், தேர்வாகும் ஊழியர்களுக்கு: மாதம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும், காலப்போக்கில் சம்பள உயர்வும் கிடைக்கும்.
கால அட்டவணை - GDS ஆட்சேர்ப்பு 2026
தற்போதைய தகவல்களின்படி, GDS ஆட்சேர்ப்புக்கான கால அட்டவணை இதுபோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:
- அறிவிப்பு வெளியீடு: ஜனவரி 2026 (விரைவில்)
- விண்ணப்ப தொடக்கம்: ஜனவரி 20, 2026 (உத்தேசம்)
- விண்ணப்ப கடைசி தேதி: பிப்ரவரி 05, 2026 (உத்தேசம்)
- தேர்வு முடிவுகள்: பிப்ரவரி - மார்ச் 2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், இந்த தேதிகள் உறுதி செய்யப்படும்.
தகுதி வரம்புகள் என்ன?
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி
கணிதம் மற்றும் ஆங்கிலம் கட்டாய பாடங்களாக படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது
அதிகபட்சம் 40 வயது
SC / ST / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்
மொழித் தகுதி - விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை 10ஆம் வகுப்பு வரை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்
எப்படி விண்ணப்பிப்பது?
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், விண்ணப்பதாரர்கள்: https://indiapostgdsonline.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்வு இல்லாமல், 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மத்திய அரசு வேலை பெறும் இந்த வாய்ப்பு, கிராமப்புற இளைஞர்கள் மற்றும் அரசு வேலை கனவு காண்பவர்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைய உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, விண்ணப்பதாரர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு சான்றிதழ்கள், வயது சான்று, சமூகச் சான்று போன்ற ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications