இந்தியாவின் சாதனைகள் குறித்து அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து, இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதத்திற்கு, பெங்களூருவைச் சேர்ந்த ஒரு துணிகர முதலீட்டாளர், இந்தியாவின் சமீபத்திய மற்றும் வரலாற்றுச் சாதனைகளை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
வெளியில் இருந்து ஒருவர் இந்தியாவின் பெருமைகளை குறைத்து மதிப்பிடும்போது, உள்ளூர் வல்லுநர்கள் தங்கள் நாட்டின் சாதனைகளை தகுந்த ஆதாரங்களுடன் முன்னிலைப்படுத்துவது ஒரு சாதரண விசயம்தான். அப்படி இந்த விவகாரத்திலும், இதுவே நடந்திருக்கிறது.

சர்ச்சை கிளப்பிய அமெரிக்க தொழிலதிபர்!:அமெரிக்காவைச் சேர்ந்த துணிகர முதலீட்டாளரும், சமூக வலைத்தளங்களில் பிரபலமானவருமான சார்லஸ் ஹேவுட், X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், நவீன காலத்தில், எந்தத் துறையிலாவது ஒரு இந்தியர் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க எதையாவது சாதித்துள்ளாரா? எனக்குத் தெரியவில்லை. அவர்களிடம் 1.5 பில்லியன் மக்கள் இருப்பதால், அவர்களின் திறமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுவது விசித்திரமாகத் தெரிகிறது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தப் பதிவு, உடனடியாக இந்தியர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பைக் கிளப்பியது. பலரும் ஹேவுட்டின் கருத்து அறியாமையில் இருந்து வருவதாக விமர்சித்தனர்.
பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரியின் சரியான பதிலடி: ஹேவுட்டின் கேள்விக்கு, பெங்களூருவைச் சேர்ந்த முதலீட்டாளர் திலீப் குமார், இந்தியாவின் சாதனைகளைத் தொகுத்து ஒரு விரிவான பதிலைப் பதிவிட்டார். அவர் குறிப்பிட்ட சில முக்கிய சாதனைகள்
விண்வெளி ஆராய்ச்சி: 2023-ஆம் ஆண்டு, இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம், இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. (நாசா கூட இதைச் செய்யவில்லை).
டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனை: இந்தியாவின் யுபிஐ (UPI) தளமானது, மாதந்தோறும் 10 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செய்து சாதனை படைத்து வருகிறது. ஆனால், அமெரிக்கா இன்னமும் நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது.
நோபல் பரிசுகள்: நவீன காலங்களில் நோபல் பரிசு வென்ற இந்தியர்களையும் திலீப் குமார் பட்டியலிட்டார். அதில், அமர்த்தியா சென் (பொருளாதாரம்), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வேதியியல்), கைலாஷ் சத்யார்த்தி (அமைதி), மற்றும் அபிஜித் பானர்ஜி (பொருளாதாரம்) ஆகியோர் அடங்குவர்.
தன் பதிவின் இறுதியில், வெளிப்படையான பங்களிப்புகளை நீங்கள் காண முடியவில்லை என்றால், அது இந்தியர்களைப் பற்றிய குறைபாடு அல்ல, மாறாக, நீங்கள் பார்க்கும் விதத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றியது என்று திலீப் குமார் குறிப்பிட்டார்.
திலீப் குமாரின் இந்தப் பதிவு உடனடியாகப் பலரின் கவனத்தைப் பெற்றது. பெரும்பாலான பயனர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். பலர் ஹேவுட்டின் கருத்தை "சிறுபிள்ளைத்தனமானது" என்று விமர்சித்தனர். ஒரு பயனர், ஹேவுட் பயன்படுத்தும் பெரும்பாலான நவீன கணிதமும் அறிவியலும் இந்தியாவில் இருந்து திருடப்பட்டவை என்பதை அவர் உணர வேண்டும். பூஜ்ஜியம் இல்லாமல் உலகம் எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் சிந்திக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சிலர் இது போன்ற பதிவுகள் ஈடுபாட்டைப் பெறுவதற்காகவே செய்யப்படுகின்றன என்றும், இந்த விவாதத்தில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் திலீப் குமாருக்கு ஆலோசனை வழங்கினர். இந்தப் பதிவுகளின் விவாதம், இந்தியாவின் சாதனைகள் குறித்த பெருமையை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் கொண்டு வந்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications