SBI வங்கியுடன் அனைத்து பொதுத்துறை வங்கிகள் இணைப்பா..? முக்கிய அப்டேட் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!!

சமீப காலமாக பொதுத்துறை வங்கிகள் மீண்டும் இணைக்கப்படுமா என்ற கேள்வி வங்கி துறையிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிகம் எழுந்து வருகிறது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவான பதில் அளித்துள்ளார்.

தற்போது பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு அரசிடம் எந்த திட்டமும், நோக்கமும் இல்லை என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விளக்கத்தை அளித்தார்.

SBI வங்கியுடன் அனைத்து பொதுத்துறை வங்கிகள் இணைப்பா..? முக்கிய அப்டேட் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!!

நிதியமைச்சர் உறுதி
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு குறித்து மத்திய அரசிடம் "எந்த ரோட்மேப்பும் இல்லை... தற்போது அப்படி ஒரு திட்டம் இல்லை" என்று நிர்மலா சீதாராமன் தெளிவாக கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் வங்கி இணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், இந்திய வங்கி துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய உயர்மட்ட வங்கி குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தக் குழு வங்கித் துறையின் எதிர்கால வளர்ச்சி திசையை முழுமையாக ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.

'விக்சித் பாரத்' இலக்கு
2026-27 யூனியன் பட்ஜெட்டில் 'விக்சித் பாரத்' இலக்கை முன்னிட்டு உயர்மட்ட வங்கி குழுவை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பாதையில், பெரிய அளவிலான திறன்மிக்க நிதி நிறுவனங்கள் தேவை என்று அரசு கருதுகிறது.

இந்தக் குழு வங்கித் துறையின் ஒருங்கிணைப்பு, செயல்திறன், நிதி நிலைத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு, நிதி சேர்க்கை (financial inclusion) ஆகிய அனைத்து அம்சங்களையும் ஆழமாக ஆராயும். எனவே, எதிர்காலத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவை இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகள் ஏன் முக்கியம்
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களில் பொதுத்துறை வங்கிகள் தான் பெரும்பாலான மக்களுக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), விவசாயிகள், தனிநபர் கடன்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக உள்ளன. கடந்த காலங்களில் வங்கி இணைப்புகள் நடந்தபோது கிளை மாற்றங்கள், சேவை பாதிப்புகள், ஊழியர் மாற்றங்கள் போன்றவை ஏற்பட்ட அனுபவம் மக்களிடம் உள்ளது.

தற்போது இணைப்பு திட்டம் இல்லை என்ற அமைச்சரின் தெளிவான அறிவிப்பு, வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் MSME துறை, விவசாய கடன்கள், சுயதொழில் செய்பவர்கள் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியம்.

வங்கி துறையின் அடுத்த கட்டம் என்ன?
பொதுத்துறை வங்கித்துறையில் உடனடியாக எந்த வங்கி இணைப்பு திட்டமும் இல்லை. ஆனால் வங்கி துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் விரிவான ஆய்வு மற்றும் உயர்மட்ட குழு அமைப்பு மூலம் எதிர்கால திட்டங்கள் உருவாக்கப்படும்.

இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ள நிலையில், இந்தக் குழுவின் பரிந்துரைகள் முக்கிய பங்கு வகிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+