இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்தால் வேலையை ராஜினாமா செய்கிறார்கள் என்பதால் ஊழியர்களை அழைக்கவே நிறுவனங்கள் தயங்கி வருகிறது.
இந்த நிலையில் ஒரு நிறுவனத்தின் சிஇஓ சற்றும் யோசிக்காமல் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் இல்லையெனில் வேலையை விட்டு கிளம்புங்க என வெளிப்படையாக அறிவித்துத் தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது யாராக இருக்கும்..? முடிந்தால் சரியாகக் கணித்துச் சொல்லுங்க பார்ப்போம்...
வொர்க் ப்ரம் ஹோம்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது கிட்டதட்ட 2.5 வருடம் நீட்டித்த நிலையில் தற்போது ஊழியர்களை அழைப்பதில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது.
டெஸ்லா எலான் மஸ்க்
இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டு உள்ளார். இல்லையெனில் வேலையை விட்டு வெளியேறும் படி அறிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் ஈமெயில் தற்போது டிவிட்டரில் வைரலாகியுள்ளது.
டெஸ்லா நிர்வாகம்
டெஸ்லா நிர்வாகத்தால் இனி அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கைகள் பெரிய அளவில் குறைந்த நிலையில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு பெரும் மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 மணிநேரம்
வீட்டில் இருந்து பணியாற்றும் டெஸ்லா ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 40 மணிநேரம் பணியாற்றி இருக்க வேண்டும் இல்லையெனில் பணியை விட்டு வெளியேறலாம் எனவும், இது டெஸ்லா பேக்டரி ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை விடவும் குறைவு எனச் சுட்டிக்காட்டியுள்ளார் எலான் மஸ்க்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications