இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்தால் வேலையை ராஜினாமா செய்கிறார்கள் என்பதால் ஊழியர்களை அழைக்கவே நிறுவனங்கள் தயங்கி வருகிறது.
இந்த நிலையில் ஒரு நிறுவனத்தின் சிஇஓ சற்றும் யோசிக்காமல் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் இல்லையெனில் வேலையை விட்டு கிளம்புங்க என வெளிப்படையாக அறிவித்துத் தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது யாராக இருக்கும்..? முடிந்தால் சரியாகக் கணித்துச் சொல்லுங்க பார்ப்போம்...
வொர்க் ப்ரம் ஹோம்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது கிட்டதட்ட 2.5 வருடம் நீட்டித்த நிலையில் தற்போது ஊழியர்களை அழைப்பதில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது.
டெஸ்லா எலான் மஸ்க்
இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டு உள்ளார். இல்லையெனில் வேலையை விட்டு வெளியேறும் படி அறிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் ஈமெயில் தற்போது டிவிட்டரில் வைரலாகியுள்ளது.
டெஸ்லா நிர்வாகம்
டெஸ்லா நிர்வாகத்தால் இனி அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கைகள் பெரிய அளவில் குறைந்த நிலையில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு பெரும் மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 மணிநேரம்
வீட்டில் இருந்து பணியாற்றும் டெஸ்லா ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 40 மணிநேரம் பணியாற்றி இருக்க வேண்டும் இல்லையெனில் பணியை விட்டு வெளியேறலாம் எனவும், இது டெஸ்லா பேக்டரி ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை விடவும் குறைவு எனச் சுட்டிக்காட்டியுள்ளார் எலான் மஸ்க்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications