பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதல் கொண்டு கறுப்பு பணத்தினை ஒழிக்க திட்டமிட்டு வருகின்றது. குறிப்பாக சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் குறித்த தரவுகளை அணுகியது குறிப்பிடத்தகக்து.
குறிப்பாக கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தில் டிஜிட்டல் பயன்பாட்டினை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றது.
இதற்கிடையில் மக்களவையில் சில தினங்களுக்கு முன்பு கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்ம்லா சீதாராமன், கடந்த 2020ம் ஆண்டினை விட 2021ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதியானது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஆதாரம் எதுவும் இல்லை
சுவிஸ் வங்கியில் உள்ள அனைத்து பணமும் கருப்பு பணமாக கருதக்கூடாது. சுவிஸ் வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ள இந்தியர்கள் குறித்து அதிகாரப்பூர்வ கணக்கீடுகள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
நடவடிக்கை
மேலும் வெளி நாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்து வைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழங்குகளில் 8468 கோடிக்கும் அதிகமாக வரியை செலுத்துமாறும், 1294 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையினை அபராதமாக செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட நபரகளின் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துங்கள்
அதோடு கறுப்பு பண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்தும், 14,000கோடி ரூபாயாக்கு மேலாக வரி செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது மே வரையிலான தரவுகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை
அண்மை காலத்தில் வெளியிடப்படாத வெளி நாட்டு சொத்துகள் மற்றும் வருமானங்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் பல உறுதியான மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் மற்றும் வரி விதிப்பு சட்டம் 2015 ஆகியவையும் அடங்கும். இது கடுமையான தண்டனைகளை பரிந்துரை செய்கிறது. இதனை திறம்பட செயல்படுத்துவதற்காக 29 வெளி நாட்டு சொத்து விசாரணை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications